flashvortex.

Wednesday, March 14, 2012

சிறீலங்காவில் மீண்டும் போர் வெடிக்கும் : அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைக் பேரவையில் போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தவறும் பட்சத்தில், சிறீலங்காவில் மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தெற்கு மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனில் நேற்று ஏபி செய்தியாளருக்கு அளித்த செவ்வியிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

சிறீலங்காவின் நலன்களுக்கு பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் என்பன முக்கியமானவை. இதன்மூலம் அவர்கள் உண்மையான அமைதியையும் பாதுகாப்பையும் அடைய முடியும். இல்லையேல், சொந்த சமூகத்தினரின் கோபத்தினால் நாட்டில் புதிய வன்முறைகள் ஏற்படும்.
நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்கத் தவறியவர்கள் மீளத்தோற்றம் பெற்ற கிளர்ச்சிகளை தொடர்ச்சியாக அனுபவிக்கிறார்கள். இந்நிலை சிறீலங்காவிலும் ஏற்படும் சாத்தியம் உள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா அரசாங்கம் பல வீதிகளையும் அடிப்படைக் கட்டுமான வசதிகளையும் வடக்கில் கட்டியெழுப்பியுள்ளது.

ஆனால் வடக்கில் உள்ள பல தமிழர்கள் தாம் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பதாகவே உணர்கிறார்கள்.

வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்தி அதிகாரங்களை பகிர்ந்து, தமிழர்கள் தமது பகுதியில் மேலும் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கு வழி செய்ய வேண்டும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிறீலங்காவிற்கு, அமெரிக்கா ஒரு மறைமுக செய்தியை செல்வதாக இதனை நோக்க வேண்டியுள்ளது.

மனித உரிமை பேரவையில் அமெரிக்காவிற்கு எதிராக சிறீலங்கா செயற்படும் இடத்தில், அமெரிக்காவின் அனுசரனையுடன் மீண்டும் குண்டுச் சத்தங்கள் கேட்கலாம் என்று சொல்லாமல் சொல்வதாகவே அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அமெரிக்காவின் வரலாற்றினை நோக்கும் போது இது பல நாடுகளில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment