flashvortex.

Sunday, December 25, 2011

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களின் தமிழகப் பயணம் நேர்காணல்

aho;g;ghzg; gy;fiyf;fof Clftsq;fs; kw;Wk; gapw;rpika khztHfspd; ntspf;fsg; gapw;rpf;fhd jkpofg; gazk; mDgt uPjpahfTk; mwptpay; uPjpahfTk; rpwe;j gaid mspf;fpd;wJ vd kfpo;Tld; $Wfpd;wdH khztHfs;.

15 ehl;fs; nfhz;l FWfpa gazkhf ,J mike;j NghjpYk; mwpitAk; Mw;wiyAk; khztHfspilNa cz;lhf;fpAs;sJ.
                    
 ,e;epiyapy; ,e;jg; gazk; Fwpj;J ,g; gazj;jpy; gq;F nfhz;l khztHfspd; fijfis mwpe;J nfhs;Sk; Kfkhf mtHfSld; Ngrpa NghJ………..

போதைக்கு அடிமையாகும் பேதைகள்!

எங்கு பார்த்தாலும் இன்று போதைப் பொருளின் ஆதிக்கம் தான் நிறைந்துள்ளது. பாடசாலை மாணவர்களில் இருந்து வேலை செய்பவர்கள் வரை போதைக்கு அடிமையாகி உள்ளார்கள். போதை பொருளின் பாவனைக்கு அடிமையாகி தமது வாழ்வை தொலைத்தவர்கள் ஏராளமானோர்.

போதைப் பொருள் என்றால் என்னவென்று பார்த்தால் போதையை ஏற்றிக் கொள்வதற்காகவும் சிலரால் பொழுது போக்கிற்காகவும் உள்ளெடுக்கப்படுபவை. இந்த போதைப் பொருட்களில் மதுபானம், புகையிலை, கஞ்சா, சிகரெட், போன்ற போதை தரும் பல வகையான போதைப் பொருட்கள் இன்று பாவனையில் உள்ளன. 

Friday, December 23, 2011

கிறிஸ்மஸ் தாத்தா எப்படி உருவானார்? _

கிறிஸ்மஸ் காலமென்றால் அனைவரது நினைவிலும் வருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா(சாண்டா கிளாஸ்) ஆவார். இவர் உருவான வரலாறு சுவாரஸ்யமானது.

சாண்டா கிளாஸ் கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். புனித நிக்கொலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர் துடைத்து வந்தார். இவரின் நினைவாகத்தான் கிறிஸ்மஸ் தாத்தா பாத்திரம் உருவானது. டாக்டர் கிளெமென்ற் மூர் என்பவர் தான் இதை உருவாக்கினார்.

யாழ் பத்திரிகைகள் தொடர்பாக மக்களின் எதிர்பார்ப்பு...... 'ஊடகங்கள் உண்மையை கூறவேண்டும';

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இணையத்தளம் மிக முக்கிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதிகாலை பத்திரிகை பார்க்கா விட்டால் எமக்கு விடியாதது போல் உள்ளது என்று கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
பத்திரிகைகள் மக்கள் மத்தியில் எவ்வாறான மாற்றத்தைக்கொண்டு வருகின்றன என்பது தொடர்பாக யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர்

Wednesday, December 21, 2011

கோபம், சண்டை வரும்போது மௌனம் பேசாதீர்கள்!

கோபம், சண்டை வரும்போது ஆவேசமாக கத்தி கூப்பாடு போடும் தம்பதியர், அதிவிரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொஞ்சுவதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்களாவதும் கண் கூடாக நாம் பார்க்கும் உண்மை.
ஏனென்றால், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமானது பெரும் ஆபத்தாகும்.

உயிரா? உண்மையா?

 யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்மக்களிடம் கேட்டபோது எல்லா மக்களிடமும் இருந்து வந்த பதில் 'எங்களுக்கு நடந்தது, நடக்கிறது தெரியும் ஆனால் எம்மால் எதுவுமே  சொல்லமுடியாது. ஏங்களை எதுவுமே கேட்க வேண்டாம். நீங்கள் கேட்டிட்டு போய் கண்டபடி எழுதுவீர்கள் பிரச்சனை எங்களுக்குதான்.அது உங்களுக்கு தெரியாது'  இதே பதில்தான் யாழ்நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்குத் தெரியும் ஆனால் சொல்லமாட்டோம் என்ற பதில்தான் எங்களுக்கு கிடைத்தது. யாழ் நகரின் பல பகுதிகளிலும் எங்களுக்கு கிடைத்தது.

Saturday, December 17, 2011

நம்பிக்கையின் மறு உருவம் கல்பனா சாவ்லா

2003 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதி கொலம்பியா வான்கலம் விண்ணில் சிதைந்தது. இந்திய சமூகமும் ஒட்டுமொத்த விண்வெளி சமூகமும் சோகத்தில் மூழ்கியது. 41 வயதில் வானத்தில் ஒரு நட்சத்திரமாகிப்போன இந்தியாவின் முதல் வீராங்கனை கல்பனா சாவ்லாவைப் பற்றிதான் தெரிந்துகொள்ள இருக்கிறோம்.

சார்லி சாப்ளின் (சிரிப்பு ஜீனியஸ்)

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள் அப்படிப்பார்த்தால் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்களை மருத்துவர்களுக்கு சமம் என்று சொல்லலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்த நபர் யார் என்று கேட்டால் ஒரே ஒரு நபரைத்தான் வரலாறு புன்னைகையுடன் உதிர்க்கும். அவர்தான் ஈடு இணையற்ற ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். இன்று திரைப்படங்களில் வசனங்களை கேட்டு சிரிக்கிறோம் ஆனால் ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த ஒரு கால கட்டத்தில் மொழியின் துணையின்றி வசனம் எதுவும் பேசாமால் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்தான் சார்லி சாப்ளின்.

மேரி கியூரி அம்மையார் (அறிவியல் மேதை)

1901 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இன்றுவரை மொத்தம் 826 அறிஞர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், இலக்கியம், உலக அமைதி ஆகிய ஆறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி சாதனை புரியும் அறிஞர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து நோபல் பரிசு வழங்கி கெளரவிக்கப்படுகின்றனர். உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தியவர் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு தனிச்சிறப்பு சேர்க்கிறது. ஏனெனில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படாத ஒரு கால கட்டத்தில் கலை, அறிவியல் போன்ற துறைகளில் பெண்களால் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு காலத்தில் அந்த மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டது.

கிரிஸ்டோபர் ரீவ்ஸ் (Super Man)

உலகிலேயே மிகுந்த பலசாலி யாரென்று கேட்டால் நீங்கள் யாரைக்குறிப்பிடுவீர்கள்? சிறுவர்களையும், இளையர்களையும் கேட்டால் ஒரு பெயர் அடிக்கடி ஒலிக்கும் அதுதான் 'சூப்பர்மேன்'. சராசரி மனிதனால் செய்ய முடியாத, கற்பனை செய்துகூட பார்க்க முடியாத பல சாகசங்களை திரையில் புரிந்து பார்ப்பவர்களை கனவுலகில் சஞ்சரிக்கவிட்ட ஓர் அற்புத கதாபாத்திரம்தான் 'சூப்பர்மேன்'. அந்தக் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்ததன் மூலம் பல்லாயிரம் சிறுவர்களுக்கும், இளையர்களுக்கும் உந்துதலையும், உத்வேகத்தையும் கொடுத்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் கிரிஸ்டோபர் ரீவ்ஸ். என்பதுகளிலும், தொன்னூறுகளிலும் உலகின் ஆக பலசாலியாக திரையில் வலம் வந்த அவர் ஓர் விபத்தின் காரணமாக தன் உடலின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும், பலத்தையும் இழப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

புரூஸ் லீ - தற்காப்புக்கலையின் முடிசூடா மன்னன்

நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையை விட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர். உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டி ஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்பு போன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்கு அப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காக பள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டை நடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனை செய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும் உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும் முடிந்திருக்காது.

ரத்மலனையில் ஓர் அற்புத திருநந்தீஸ்வரம்!

ரத்மலானையிலிருந்து கடற்கரையோரமாக சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது திருநந்தீஸ்வரம் ஆலயம். இலங்கையின் பெரும்பாலானோர், இவ்வாறானதொரு ஆலயம் இருப்பதாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மிகப் பழைமை வரலாறு கொண்ட இந்த ஆலயத்தின் சுவடுகள் இன்னமும் அழியாமல் இருப்பது இறைசக்தி என்றே கணிப்பிட முடியும்.
திருநந்தீஸ்வரம் ஆலயம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். பெரும்பாலான சிங்கள மக்கள் செறிந்துவாழும் அப்பகுதியிலுள்ள இந்த ஆலயத்தை ‘ கொனா கோவிலய(நந்திக் கோயில்’ என்றே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.
வித்தியாசமான அமைதி பொருந்திய இடமாக கோயில் வளாகம் இருக்கிறது. சுமார் 1000 வருடங்கள் பழைமையான ஆலமரம் இன்னும் கோயிலுக்குச் சான்றாக விளங்குகிறது.
போர்த்துக்கேயர் காலத்தில் கொழும்பு மற்றும் அதனை அண்டி வாழ்ந்த இந்துக்களின் பிரதான வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்கி வந்துள்ளது.

திருகோணேஸ்வரர் ஆலயம்

அமைவிடம்:-  திருகோணமலை

இறைவர் திருப்பெயர் : திருக்கோணேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : மாதுமையாள்
தல மரம்   : கல்லால மரம்
தீர்த்தம்    : பாவநாசம்
வழிபட்டோர்   : இராவணன் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் தமிழர்
தேவாரப் பாடல்கள்  : சம்பந்தர்

தல வரலாறு

  • இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.
  • சுவாமிக்கு விளக்கேற்றுவதற்குப் போதியளவு நெய்யும் திரியும் கிடைப்பதற்கு வழிவகுத்தவர்கள், தாமரைத் தண்டின் நூலெடுத்து திரிசெய்தார்கள்; அந்த ஊர் இன்றும் “திரிதாய்” என்று வழங்குகின்றது.
  • போத்துக்கேயர் 1624 ஆம் ஆண்டில் இத்திருக்கோயிலை பாழ்செய்துள்ளனர். அன்று அருணகிரிநாதர் மனமுருகிக்கண்ட தலத்தாறு கோபுரத்தழகைப் பறங்கியர்களின் தளபதியும் பார்த்துருகியுள்ளான். அவன் தன் படையில் ஓவியம் வல்லானைக் கொண்டு அவற்றின் அழகை ஓரளவு வரைந்து எடுத்துக்கொண்ட பின்பே கோயிலைத் தரைமட்டமாக்க உத்தரவு பிறப்பித்தான்.

Tuesday, December 13, 2011

பிரான்ஸ் செல்ல யாழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு

குடியுரிமையுடன் பிரான்சில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் தமது சொந்தங்களை பிரான்ஸ்சிக்கு அழைக்க விரும்பினால் அந்த கோரிக்கை சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறே தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் வாகன விபத்து; இருவர் உயிரிழப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த நியாப் நிறுவனத்தின் பிக்கப்ரக வாகனம் கரணவாய் இமையாணன் பகுதியில் தனது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன் மோதிச்சென்று இறுதியாக கடையொன்றின் சுவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

 துன்னாலை வடக்கைச் சேர்ந்த வாகனச் சாரதியான கணேசமூர்த்தி பார்த்தீபன் (வயது 22), கரவெட்டி வடக்கைச் சேர்ந்த செல்வநாயகம் கோபிநாத் (வயது 23) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

அதேவேளை இவ் விபத்தில், அல்வாய் தெற்கைச் சேர்ந்த அம்பிகைபாலன் செந்தூரன் (வயது 23) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இவ் விபத்துச் சம்பவம் குறித்து பருத்தித்துறை காவற்றுறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Monday, December 12, 2011

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷனை போக்குவதற்கான சிறந்த வழி

பலரையும் பாடாய்படுத்தி வரும் டென்ஷன் பிரச்னைக்கு வழி சொல்கிறார் பிசியோதெரபி டாக்டர் கார்த்திகேயன். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த வேண்டும்.சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் முதலில் டென்ஷன் ஆகிற ஆளா என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.ஆம் என்று பதில் வந்தால் எந்தெந்த காரணங்களுக்காக டென்ஷன் வருகிறது என்று பட்டியலிடுங்கள். அவற்றை ஒவ்வொன்றாக மூளையில் இருந்து ஒழித்துக் கட்டுங்கள்.

அப்போது எந்த கனமும் இன்றி மனம் லேசாக இருக்கும். உணவு விஷயங்களிலும் கவனம் தேவை. நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்து உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறதா, உழைப்புக்கு ஏற்ற உணவு உண்கிறீர்களா என்பதை உணவு ஆலோசகரிடம் விவாதித்து உணவு முறையை அறிந்து கொள்ள வேண்டும்.டென்ஷன், மறதி, படபடப்பு, கோபம் உள்ளிட்டவை குறித்து மனநல ஆலோசகரின் உதவியுடன் பழக்க வழக்கத்தை சரி செய்யலாம். தவறான உணவு முறை, வாழ்க்கை முறை இரண்டையும் சரி செய்வதன் மூலம் டென்ஷனை விரட்ட முடியும்.

டைம் மேகசினில் கொலவெறி

ஒரே ஒரு பாடலுக்கு இவ்வளவு பரபரப்பு , வரவேற்பு இருக்குமா என்ற கேள்விக்கு வரலாறு கூட படைக்க முடியும் என்ற அளவுக்கு வெற்றி கண்டுள்ளது மூன்று படத்தின் ஒய் திஸ் கொலவெறி பாடல். பிளாப் சாங் என்று ஆரம்பித்தாலும் இன்றளவில் உலக மெகா ஹிட்டாகி உள்ளது கொலவெறி பாடல். கோலிவுட்டில் காலடி எடுத்த வைத்த மாத்திரத்தில் அனிருத்துக்குத் தான் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

உலக அமைதிக்கான நோபல் விருதுகள் மூன்று பெண்களுக்கு வழங்கப்பட்டன

Paristamilஅநீதி, சர்வாதிகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை எதிர்த்துப் போராடிய மூன்று பெண்களுக்கு, நேற்று நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த விழாவில், இந்தாண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன.

நோபல் அறக்கட்டளை நிறுவிய ஆல்பிரட் நோபல், 1896, டிசம்பர் 10ம் தேதி, இத்தாலியில் காலமானார். ஆண்டுதோறும் அவரது நினைவு நாள் அன்று, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், நோபல் விருது வழங்கி கவுரவிக்கப்படுவர்.

இந்தாண்டுக்கான நோபல் விருதுகள், சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நேற்று, நோபல் விருதுகள், உரியவர்களுக்கு வழங்கப்பட்டன. அறக்கட்டளை விதிகளின்படி முதலில், உலக அமைதிக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு விருதும், 15 லட்சம் டாலர் ரொக்க மதிப்புடையவை. லைபீரிய அதிபர் எல்லன் ஜான்சன்,73, லைபீரிய பெண் உரிமைப் போராளி லீமா போவீ,39 மற்றும் ஏமனில் அதிபர் சலேவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடி வரும் தவாக்குல் கர்மான்,32, ஆகியோருக்கு, இந்தாண்டுக்கான நோபல் விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இதன் மூலம், நோபல் விருதுகள் என்றாலே அது ஆண்களுக்குத் தான் என்ற வாதம் முறியடிக்கப்பட்டதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மனை‌வி எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.
 
மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
 
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
 

உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைப்பு

இந்தியாவில் இந்த மாதம் 17 ஆம் தேதி தொடங்கவிருந்த உலக சீரீஸ் ஹாக்கிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஹாக்கி விளையாட்டை யார் நிர்வகத்து நடத்துவது என்பது தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பன்னாட்டு வீரர்கள் பங்குபெறவிருந்த இந்த உலக ஹாக்கி சீரீஸ் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக போட்டிகளை நடத்தும் நிம்பஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நிம்பஸ் நிறுவனம் இந்திய ஹாக்கி சம்மேளனத்துடன் இணைந்து இந்தப் போட்டிகளை நடத்தவிருந்தது.தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்தப் போட்டிகள், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்ற பிறகு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை நிம்பஸ் நிறுவனத்தின் பேச்சாளர் கார்ல் டி கோஸ்ட்டா தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார்.இந்தியாவில் ஹாக்கி விளையாட்டு அமைப்புகளான ஹாக்கி இந்தியாவும், இந்திய ஹாக்கி சம்மேளனமும் எதிரும் புதிருமாக இருக்கும் நிலையில், இடையே சிக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டும், ஹாக்கி விளையாட்டு வீரர்களும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


Friday, December 9, 2011

மீட்பர் யேசு சிலை நிறுவி எண்பது ஆண்டுகள்

பிரேசில் நாட்டின் மிகவும் அறியப்பட்ட மீட்பர்  யேசுவின் சிலை அமைக்கப்பட்டு 80 ஆண்டுகள் ஆகின்றன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள இந்தச் சிலையின் 80 ஆண்டுகளை குறிக்கும் நோக்கில், அது அமைந்துள்ள கொக்கோவடா மலைக் குன்றில் சிறப்பு பிரார்த்தனைகள் இடம் பெற்றுள்ளன. 

குவானபரா வளைகுடாவை பார்த்தவாறு அமைக்கப்பட்டுள்ள மீட்பர் யேசுவின் சிலை பிரேசிலின் மிகவும் அறியப்பட்ட ஒரு இடமாக திகழ்கிறது. உலகெங்கிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் மீட்பர் யேசுவின் சிலையை தரிசிக்க சுமார் இருபது லட்சம் மக்கள் வருகிறார்கள். பதினைந்து மாடிகள் அளவுக்கு உயரமான இந்த யேசுபிரானின் திருவுருவச் சிலை, ரியோ டி ஜெனிரோவிலுள்ள கொக்கோவ்டா மலைக் குன்றின் உச்சியில் 1931 ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி நிறுவப்பட்டது முதல் மக்களால் தரிசிக்கப்பட்டு வருகிறது.
அந்தச் சிலைக்குள் சென்று பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், அதன் அடிவாரத்திலிருந்து பார்த்தால் உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்று எனக் கருதப்படும் ரியோ டி ஜெனிரோவின் முழுப் பார்வையும் தெரியும்.

உலக சாதனை : சேவாக் அதிரடி இரட்டை சதம்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 4வது ஒருநாள் போட்டி இந்தியாவின் இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் இன்று(8.12.2011) பகல்/இரவு ஆட்டமாக நடந்து வருகிறது.

இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் சேவாக் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இந்திய அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சேவாக்-காம்பீர் ஜோடி களமிறங்கியது.

ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சேவாக்-காம்பீர் ஜோடி, மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

இத்தாலியில் மாஃபியா கும்பல் தலைவர் பிடிபட்டார்

இத்தாலியில் கமோர்ரா எனப்படும் சட்டவிரோத குற்ற வலயமைப்பின் மிகச் சக்திவாய்ந்த தலைவரான மைக்கேல் ஸகாரியா என்பவரைத் தாங்கள் பிடித்துள்ளதாக அந்நாட்டின் பொலிசார் கூறுகின்றனர்.

கடந்த பதினாறு வருடங்களாக இவர் சட்டத்தால் தேடப்பட்டு வந்த ஒரு நபர்.

நேப்பில்ஸ் நகரருகேயுள்ள தனது சொந்த ஊரில் நிலத்தடியில் இருந்த ஒரு ரகசிய அறையிலிருந்து இவர் பிடிபட்டார்.

கமோர்ரா குற்ற வலயமமைப்பில் உள்ள ஒன்றான கஸாலெஸி பிரிவின் தலைவர் இந்த ஸகாரியா ஆவார்.

கூடுதலான பொருளாதார கட்டுப்பாடுகளுக்கு யூரோ நாணய நாடுகள் உடன்பட்டன

யூரோ நாடுகளின் கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக உடன்படிக்கை
யூரோ நாடுகளின் கடன் நெருக்கடியை சமாளிப்பதற்காக உடன்படிக்கை யூரோ நாணயம் புழங்கும் நாடுகளில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடியை சமாளிக்கும் நோக்கில் தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு செலவுத் திட்டத்திலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கான ஒரு திட்டத்துக்கு யூரோ புழங்கக்கூடிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்பட்டுள்ளன.
பிரஸ்ஸல்ஸ் நகரில் நடந்த மாநாட்டில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.

Tuesday, December 6, 2011

மின்சாரம் தாக்கி யானைகள் மரணம்

இலங்கையில் அம்பாறை மாவட்டம் வீரகொடை 17 ம் குடியேற்ற கிராமத்தில் திங்கட்கிழமை நள்ளிரவு மின்சாரம் தாக்கி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இக் கிராமத்திற்குள் காட்டு யானைகள் ஊடுருவி, பொது மக்களின் பயிர்களையும் உடமைகளையும் சேதமாக்கி வருவதாக உள்ளுர் வாசிகள் தெரிவிக்கின்றனர்.

Friday, December 2, 2011

எய்ட்சால் பாதிக்கப்பட்டோரை காக்க விரைவில் புதிய சட்டம் : ஆசாத் உறுதி

எய்ட்சால் பாதிக்கப்பட்டோரிடம், மற்றவர்கள் பாகுபாடாக நடந்து கொள்வதை தவிர்க்கும் வகையில், விரைவில் சட்டம் கொண்டு வரப்படும்' என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார்.

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, டில்லியில் நேற்று விழா நடந்தது. இதில், பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறியதாவது: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களால் பாகுபாடாக நடத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.

Thursday, December 1, 2011

மைக்கேல் ஜாக்சன் குடும்ப டாக்டருக்கு 4 ஆண்டுகள் சிறை ; நியூயார்க் கோர்ட் உத்தரவு!

பிரபல பாப் பாடகர், மைக்கேல் ஜாக்சன் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரேக்கு, நான்கு ஆண்டுகள், சிறைத் தண்டனை விதித்து, நியூயார்க் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.

என்ன நடந்தது? : கடந்த 2009, ஜூன் 25ம் தேதி, மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், அவரது குடும்ப டாக்டர் கான்ராட் முர்ரே, 58, அவரைப் பரிசோதித்து விட்டுச் சென்றார். பிரேத பரிசோதனையில், அளவுக்கு அதிகமாக, "ப்ரோபோபோல்' என்ற வலி நிவாரணி அவர் உடம்பில் இருந்தது தெரியவந்தது.

சர்வாதிகாரி ஸ்டாலின் மகள் அமெரிக்காவில் காலமானார்

முன்னாள் சோவியத் ஒன்றிய சர்வாதிகாரியான காலஞ்சென்ற ஜோசஃப் ஸ்டாலினின் ஒரே மகளான ஸ்வெட்லானா அமெரிக்காவில் முதியோர் இல்லம் ஒன்றில் தனது 85 வயதில் காலமாகியுள்ளார். நவம்பர் 22ஆம் தேதி அவர் வயிற்றுப் புற்றுநோயால் இயற்கை எய்தியுள்ளார்.

 அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் பனிப்போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் 1967ல் ஸ்வெட்லானா சோவியத் யூனியனிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது அச்சமயம் சோவியத்துக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது.

Wednesday, November 30, 2011

காதலில் தோல்வி என்றால் என்ன செய்வது..?

Paristamilகாதலித்த நபர் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் இனி வாழ்வு முழுவதும் காதலிக்காமல், திருமணம் முடிக்காமல் நாமே நம்மை அழித்துக்கொள்வதா..? எப்படியும் இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து செய்ய இருக்கும் காரியத்தை இப்போதே செய்யலாமே..
மீண்டும் பார்வை நிலைக்குப் போங்கள். மனசுக்குப் பிடித்த வேறு நபர் யாரும் இருக்கிறார்களா என தேடிப்பாருங்கள். புதியவற்றைத் தேடத் தொடங்கினால் பழைய துன்பங்கள் கண்டிப்பாக காணாமல் போய்விடும்.

புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது

Paristamil
அன்பும் காதலுமே உறவுகளை இணைக்கும் பாலம். அந்த அன்பில் இடைவெளி விழுவதால்தான் பந்தங்கள் பலவீனமடைகின்றன. கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும். அதனால்தான் `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ அன்பிருந்தால் துன்பமில்லை” . அன்பு என்பது இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது, சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
 

Tuesday, November 29, 2011

பொப் இசை சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் 'இம்மார்ட்டல்' என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம்.

பொப் இசை சக்ரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் நினைவை போற்றும் வகையில் இம்மார்ட்டல் என்ற பெயரில் ரீமிக்ஸ் ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. அவர் பாடிய 20 பாடல்கள் இதில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளன. வசீகரிக்கும் குரலாலும் அதிரடி நடனத்தாலும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் மைக்கேல் ஜாக்சன்.கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 25ம் திகதி 50வது வயதில் இறந்தார். அவருக்கு இசை அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மார்ட்டல்(இறவாப் புகழ் கொண்டவன்) என்ற பெயரிலான ஆல்பம் வெளிவந்துள்ளது. 

மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பொதுமக்களின் பார்வைக்காக அமெரிக்க அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மறைந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை அமெரிக்க அருங்காட்சியகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. ஐன்ஸ்டீன் கணித திறமைகள் கொண்ட ஓர் இயற்பியல் விஞ்ஞானி. இவர் புள்ளியில் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளில் தனது மாபெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவருக்கு 1921ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஐன்ஸ்டீன் தனது 76 வது வயதில் மரணமடைந்தார்.

Monday, November 28, 2011

பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்?

முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.

உலகின் மிக ஆபத்தான பறவை

உலகின் மிக ஆபத்தான பறவையாக நெருப்புக்கோழி கணிக்கப்பட்டுள்ளதுடன், கின்னஸ் உலக சாதனைப்புத்தகத்தின் 2007 ஆண்டுப்பதிப்பிலும் “உலகின் மிக ஆபத்தான பறவை” யாக இடம் பிடித்துள்ளது. விசேடமாக தான் காயப்பட்டாலோ அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்தாலோ பலமாக எதிரில் உள்ளவர்களை தாக்கும் ஒரு அதிசய படைப்பாகும். இதன் தாக்குதலானது எலும்புகள் முறியுமளவிற்கு பலமானதாகவும் இருக்கும்.

Sunday, November 27, 2011

ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் பறவை!

உண்ணாமல், உறங்காமல், ஓய்வெடுக்காமல் தொடர்ந்து 11 ஆயிரம் கி.மீ.பறக்கும் ‘காட்விட்’ (God-wit)என்ற பறவை, உயிரியல் வல்லுனர்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அலாஸ்காவின்  தெற்கு கடற்கரை பகுதியில், கடந்த 1976ம் ஆண்டு ராபர்ட் இ கில் என்ற உயிரியல் வல்லுனர், பறவைகள் இடம் பெயரும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது, “காட்விட்’ என்ற பறவையினத்தை அவர் கூர்ந்து கவனித்தபோது, அதன் நடவடிக்கைகள் பெரும் வியப்பில் ஆழ்த்தின.

Saturday, November 26, 2011

7ம் அறிவு வில்லன் JOHNY TRI NGUYEN எப்படித் தெரிவு செய்யப்பட்டான்?

‘ஏழாம் அறிவு’ படம் வெளியானதும் அப்படத்தில் நடித்த JOHNY TRI NGUYEN பற்றி தான் பேச்சாக இருந்தது. அவரது மிரட்டும் கண் பார்வை, அனல் பறக்கும் சண்டை காட்சிகள் என அனைத்து விதத்திலும் ரசிகர்களைக் கவர்ந்தார். சிறு குழந்தைககளுக்கும் கூட அவரை பிடித்துப் போனது.
 
‘ஏழாம் அறிவு’ படத்தில் நடிக்க இவரை எங்கு தேடி பிடித்தார்கள், ஒப்பந்தம் செய்தது எப்படி என்று விசாரித்த போது பல ஆச்சர்யமூட்டும் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அத்தகவல்கள் இதோ
 

Friday, November 25, 2011

பிரான்சின் முன்னால் முதற்பெண்மணி மரணம்.

பிரான்சின் காலஞ்சென்ற முன்னால் ஜனாதிபதியான  François Mitterrand இன் மனைவி Danielle Mitterand திங்கள் இரவு காலமாகியுள்ளார். இவருக்கு வயது 87. பரிசின் Hôpital Georges-Pompidou இல் வெள்ளிக்கிழைம  அனுமதிக்கப்பட்ட இவர் ஞாயிற்றுக்கிழமை செயற்கை மயக்க நிலையில் (coma artificiel) வைக்கப்பட்டிருந்தார்.
இவரின் சமூக நல சேவைகளினால் இவர் மிகவும் பிரபலமடைந்திருந்தார். ஜனாதிபதியின் துணைவியார் என்பதால் மட்டுமல்ல இவரது பொது நலத் தொண்டுகளாலும் இவர் முதற்பெண்மணியாகவே திகழ்ந்தார் என அரசியற் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Friday, November 4, 2011

தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய தலைமுறை

 
Paristamil
பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர்.

 
வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே அல்லது தொழில் ரீதியான பணியிலேயே குறியாக இருந்தால் அவர்களின் குடும்ப, சமூக வாழ்க்கை ஆட்டம் காணலாம்.ஒருவர் உழைக்கக்கூடிய பருவத்தில் குடும்ப வாழ்க்கைக்காக அல்லது வாழ்க்கைக்கா அதிகம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது குறித்து வாதப்பிரதிவாதங்கள் உள்ளன.
 
"குறிப்பிட்ட வயதிலேயே உழைக்க முடியும். அதனால் உழைக்கும் பருவத்தில் உழைப்பிற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்" என சிலர் கூறுகின்றனர்.

Thursday, November 3, 2011

காதல் சின்னம்


அகில உலக புகழ் தாஜ்மஹால் நீண்ட நெடிய வரலாற்றுச் சரித்திரம் கொண்டது. ஆசியாவில் இற்றைக்கு 350 வருடம் முன்பு மிகப்பலமும் செழிப்புமுள்ள சாம்ராஜ்யமுடன் இதன் கதை பின்னியுள்ளது. நினைவு மண்டபத்தின் பிரமாண்ட வரலாற்று பின்னணியும் அற்புதமான கட்டிடக்கலையும் விபரிக்கமுடியாத அழகும் பின்வருமாறு (மிக சுருக்கமாக ) அமைகின்றது.

தாஜ் மஹால் முஹல சாம்ராஜ்யத்தின் பேரரசன் "ஷாஜஹான்"  தனது காதலி , மனைவி, அரசி " மும்தாஜ் மஹால  இன் ஞாபகார்த்தமாக நிறுவிய நினைவாலயம்.

இது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றான உத்தர் பிரதேஷ்(Uttar Pradesh) மாநிலத்தின் அக்ராநகரில் அமைந்துள்ளது.

தாஜ் மஹால் 42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை மாஃபிள்கல்களால் 1631 ம்-1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 22 வருட காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது.

கட்டிடம் கட்டப்பட்ட காலப்பகுதியில் அதி நுட்பமுடைய சுமைகாவிகள் , பொறிகள் இவற்றுடன் 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் , பல நிபுணர்களும் இரவுபகலாக பயன்படுத்தப்பட்டார்கள் .

இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுரமான பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும் மற்றயநான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளது.

முதன்மையான மேல் தூபி 10 மாடி கட்டிட உயரத்திற்கு சமமாகவும் பல சிறிய கற்களை கொண்டும் உருவாக்கியுள்ளனர். மேலும் இதன் மொத்த எடை 13,000 தொன் (2,000 யானைகள் எடை) என்பதுடன் எந்தவிதமான தூண் கட்டுமானத்திலும் தாங்கி இல்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும் .

தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை மாஃபிள் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது .

அகில புகழ் பலவற்றிற்கு காரணமான இந்த கட்டிடம் பல ஆச்சரியமான கட்டிட நுணுக்கங்களையும் , கலைகளையும் , வடிவத்தினையும் கொண்டுள்ளது. இஸ்லாமிய மதத்தின் கட்டிட அமைப்புடன் பேரரசன் விருப்பின் படியான சமச்சீர் அமைப்பும் , வெள்ளை மாஃபிள் கட்டிடமும் , நீர்நிலையில் அதன் கறுப்பு வடிவான நிழல் தெறிப்பும் , கட்டிடத்தை சுற்றிவர நந்தவனம் என்பன நேர்த்தியாக கையாளப் பட்டுள்ளது. 

ஆற்றம் கரையோரமாக கட்டப்பட்டுள்ள இந்த மகாகட்டிடம் நிலத்தின் அடியிலான பாதிப்புக்களை எதிர்கொள்ளும் விதத்தில் அபாரமான கட்டிட பொறியியல் நுட்பம் பாவிக்கப் பட்டுள்ளது , அத்துடன் ஆரம்பத்தில் இருந்த திட்டவரைவு எந்த ஒரு மாற்றங்களும் செய்யப்படாது முழுமையாக நிறைவு செய்யப்பட்டது என்பது கட்டிடத்தின் முழு திட்டமிடலை நிரூபிக்கின்றது.

தாஜ்மஹால் முகப்பில் "குறான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில் (அடியில் இருந்து 30 அடிமேலான உயரத்திலும்) புலனாகும் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.

ஷாஜஹானுக்கு மூன்று மனைவியர் இருந்தபோதிலும் அதில் இரண்டாவது மனைவியாகிய முதாஜ் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார். ஷாஜஹான் 16 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் அதில் 14 பிள்ளைகளுக்கு தாயாக முதாஜ் இருந்துள்ளார். அத்துடன் மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டாராம். மும்தாஜ் இறக்கும் முன்பதாக தனது இறுதி ஆசையாக ஷாஜ-ஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்“.

அக்காலத்தில் உலகில் மிகப்பெரிய செல்வந்தரும் பேரரசருமான ஷாஜஹான் வரலற்றுடன் இருண்ட கதையும் சொல்லப்படுகிறது. அதாவது தாஜ் மஹால் கட்டி நிறைவு பெற்றதும் அங்கு வேலைசெய்த அனைவர் கைகள் வெட்டப்பட்டதாகவும் முதன்மை கட்டிட கலைஞர் சிரச்சேதம் செய்து கொல்லப் பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது மாதிரியான ஓர் நினைவாலயம் வேறு யாராலும் கட்டப்படுவதை தடுப்பதற்கு ஷாஜ ஹான் இட்டகட்டளை இது எனவும் சொல்லப்படுகின்றது .

ஷாஜஹான் கட்டளைப்படி அந்நாட்களில் தாஜ்மஹால் கட்டிட வரைபட உருவாக்கத்திலும் கட்டிட வேலைத்திட்டத்திலும் பல இந்துசமய நிபுணர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள். அத்துடன் இஸ்லாமிய சாயலும் இந்துக்கள் கைவண்ணமும் ஒன்றுசேர்ந்த இந்த அரிய கலைப்படைபின் பின்னால் பல கலைஞர்களின் பங்கு இருந்துள்ளது.

1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார மையம் இதனை உலக கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.

இந்த உலக அதிசையத்தினை பார்வையிட ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் மேலான மக்கள் சென்று வருகின்றனர்.


மேலும் பலபல பெருமையும், புகழும், கதைகளும் சொல்லும் யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால் ஒரு உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும் , உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது.

முதல் சூப்பர் ஸ்டார் ?

தமிழ் திரையுலகின், "முதல் சூப்பர் ஸ்டார்' என, வர்ணிக்கப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர் நினைவு நாளை அனுசரிக்க திரையுலகினர் யாரும் வராததது, அவரது குடும்பத்தாருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, பாலக்கரை, எடத்தெரு, கான்மியான் மேட்டுத்தெருவில் வசித்த கிருஷ்ணமூர்த்தி ஆச்சாரியார் - மாணிக்கத்தம்மாள் தம்பதிக்கு, 1910 மார்ச் 1ம் தேதி எம்.கே. தியாகராஜ பாகவதர் பிறந்தார். அப்பகுதியில் உள்ள ஜெபமாலை மாதா துவக்கப்பள்ளியில், 5ம் வகுப்பு வரை படித்த அவர், நாடகங்களில் நடிக்கத் துவங்கினார். பின்னர், 1934ம் ஆண்டு பவளக்கொடி என்னும் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். நவீன சாரங்கதாரா, அம்பிகாபதி, திருநீலகண்டர், சிவகவி, ஹரிதாஸ், அசோக்குமார், ராஜமுக்தி உள்பட, 14 படங்களில் நடித்து பிரபலமானார்.

இன்றைய காலகட்டத்தில், ஒரு படம் 10 நாட்கள் தியேட்டரின் முழு கொள்ளளவுடன் ஓடினாலே வெற்றிப்படம் என கூறி வரும் நிலையில், தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் வர்ணிக்கப்படும் தியாகராஜ பாகவதர் நடித்த, ஹரிதாஸ் என்ற படம் 4 தீபாவளிகளையும் தாண்டி தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற தியாகராஜ பாகவதர், உடல் நலக்குறைவால், 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி இறந்தார். திருச்சியின் மற்றொரு மைந்தனாக திரையுலகில் வலம் வந்த எம்.ஆர். ராதா ஏற்பாட்டில், தியாகராஜ பாகவதர் உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு, மக்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன்பின், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஊர்வலத்துடன் அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டு திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை ரோடு அருகேயுள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

ஆளில்லா விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா!

Paristamilசர்வதேச விண்வெளி நிலையத்தை உருவாக்கும் முயற்சியில் இரண்டாம் கட்டமாக, சீனா நேற்று, ஆளில்லா விண்கலம் ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
அமெரிக்கா, ரஷ்யா இணைந்து செயல்படுத்தி வரும்,"மிர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு' போட்டியாக, சீனா தனக்கான ஒரு விண்வெளி நிலையத்தை, 2020க்குள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.இதன் முதல் கட்டமாக, கடந்த செப்டம்பர் 29ம் தேதி, "லாங் மார்ச் 2எப்/ஜி' என்ற ஏவுகணை மூலம், "தியான்காங்-1' அல்லது "விண்ணுலக சொர்க்கம்' என்ற விண்வெளி ஆய்வுக் கூடம் வெற்றிகரமாக விண்ணில் நிறுவப்பட்டது.

புதிய விண்கலம்:இதையடுத்து, இரண்டாம் கட்டமாக நேற்று, "ஷென்÷ஷாவூ-8' என்ற ஆளில்லா விண்கலம், "லாங் மார்ச் - 2 எப்' என்ற ஏவுகணை மூலம் விண்ணில் ஏவப்பட்டது. 9 மீ., நீளமும், 2.8 மீ., விட்டமும், 8 டன் எடையும் கொண்ட இந்த விண்கலம், பலமுறை திருத்தி வடிவமைக்கப்பட்டு, பின் ஏவப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து வானில், 343 கி.மீ., உயரத்தில் சுற்றி வரும்.

எய்ட்ஸ் நோயை 15 நிமிடத்தில் சிறிய சிப் மூலம் அறியலாம்

எய்ட்ஸ் நோய் தாக்கி யுள்ளதா? என்பதை ரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதற்காக பல நாட்கள் காத்து இருக்க வேண்டி உள்ளது. இதனால் பயமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தற்போது அதுபோன்ற கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்த 15 நிமிடத்தில் எய்ட்ஸ் நோய் பாதிப்பை அறிய முடியும். 'எம் சிப்' மூலம் இதை கண்டறிய முடியும். இது 'கிரீடிட்' கார்டு போன்று இருக்கும். அதில் ரத்தம் செலுத்துப்பட்டு பரிசோதிக் கப்படுகிறது. இதன்மூலம் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய முடியும். எய்ட்ஸ் நோய் மட்டுமின்றி பால்வினை நோய் பாதித் துள்ளதா எனவும் தெரிந்து கொள்ளலாம்.

சூரியனுடன் மோதி அழிந்துபோகும் வால் நட்சத்திரம்:


அண்டவெளியிலும் மற்றும் நமது பால்வெளியிலும் பல நூற்றுக்கணக்கான வால் நட்சத்திரங்கள் வலம்வந்துகொண்டு இருக்கின்றன. அவை உண்மையாகவே ஒரு விண்கல்லாகவே நோக்கப்படுகிறது. அவை பயணிக்கும் வேகத்தால் அக் கற்களில் இருந்து தூசித்துகள்கள் கிளம்பி பின்நோக்கிச் செல்வதால் அக் கல்லுக்கு ஒரு வால் இருப்பதுபோலத் தோற்றமளிக்கிறது என்று விஞ்ஞானிகள் விளக்கஞ்சொல்லுகின்றனர்.



இதுபோல ஒரு வால் நட்சத்திரம் சமீபத்தில் சூரியனோடு மோதி அழிந்துள்ளது. இவ்வாறு நடக்கும் காட்சிகள் அபூர்வம் அதனை மனிதனின் கண்களால் பார்க்கவும் முடிவதில்லை. ஆனால் செயற்கைக்கோள்களின் துல்லிய கமராக்களின் கண்களில் இருந்து இவை தப்பிவிடுமா என்ன ? 

டைனோசர்கள் அழிந்தது விண்கற்களாலா?

பூமியில் சுமார் 1300 வகையான `ஊர்வன’ இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், டைனோசர்.ஒரு காலத்தில் இது பூமியின் முக்கிய உயிரினமாகத் திகழ்ந்தது. இவ்வளவு பெரிய உயிரினம் எப்படி அழிந்துபோனது என்பது இன்றைக்கும் புதிராக உள்ளது. ஏறக்குறைய 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் உலவித் திரிந்திருக்கின்றன டைனோசர்கள். அப்போது இவைதான் பூமியின் மிகப் பெரிய உயிரினங்கள். மிக அதிகமான எடை, மாறிவந்த காலச்சூழலால் டைனோசர்கள் மடிந்திருக்கலாம் என்று ஒரு கருத்து கூறப்படுகிறது. ஆனால் 1980-ல் லூயிஸ் அல்வரேஸ் என்ற புவி ஆராய்ச்சியாளர் ஓர் ஆய்வு செய்தார். அதன்படி, 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான நில அடுக்குகளில் `இரிடியம்’ என்ற தனிமம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பசியின் காரணமாக பல மைல் தூரம் மலை ஏறிய டைனோசர்கள்

அதிக பசியின் காரணமாக டைனோசர்கள் பல மைல் தூரம் மலை ஏறியிருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.
உலகில் 23 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உயிரினம் டைனோசர். 16 கோடி ஆண்டுகள் உயிர் வாழ்ந்த இந்த இனம் ஆறரை கோடி ஆண்டுகள் முன்பு அழிந்ததாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
உலகின் பல பகுதிகளிலும் நடக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் போது டைனோசர்களின் படிமங்கள், எலும்புகள், பற்கள் போன்றவை கிடைத்து வருகின்றன.
அமெரிக்காவின் உடா மாநில அருங்காட்சியகத்தில் டைனோசர்களின் பற்கள், எலும்புகள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆய்வின் போது கிடைத்த பற்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. 

தாவர எண்ணெயில் இயங்கும் விமானம்: சீன நிறுவனம் சாதனை

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் வகையில் சீனாவில் முதன் முறையாக தாவர எண்ணெயில் இயங்கும் விமான சேவை நேற்று பரிசோதிக்கப்பட்டது.
பூமி வெப்பமாவதைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவும் புதுப்பிக்கத்தக்க மாற்று எரிபொருளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக விமானங்களுக்கு தாவர எரிபொருளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் அமெரிக்காவும் இணைந்து ஆல்கா அல்லது ஜட்ரோபா கொட்டையிலிருந்து தாவர எரிபொருள் கண்டுபிடிப்ப தற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. 

சர்வாதிகாரி கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன?

கொல்லப்பட்ட கடாபியின் இறுதி தினங்கள் எப்படி இருந்தன? அவர் என்னவெல்லாம் செய்தார்? என்ன பேசினார்? இந்த விபரங்கள் தற்போது விலாவாரியாக வெளியாகி உள்ளன.
தலைநகர் ட்ரிபோலியை போராளிப் படைகள் கைப்பற்றியபோது, ஆகஸ்ட் 21ம் தேதி அங்கிருந்து தப்பி ஓடினார் கடாபி. தனது நம்பிக்கைக்கு உரிய பாதுகாவலர்கள், நெருங்கிய உறவினர்கள், விசுவாசிகள், மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோர் அடங்கிய 10 பேர் கொண்ட குழு ஒன்றுடன் சிறிய வாகனத் தொடர் ஒன்றில் அவர் இரவோடு இரவாக ட்ரிபோலியை விட்டு தப்பிச் சென்றார்.
கடாபியுடன் சென்ற குழுவில் ஒருவர், தாவோ. இவர் கடாபியின் நெருங்கிய உறவினரும்கூட.
தற்போது கைது செய்யப்பட்டு, மத்திய உளவுத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ள தாவோதான், கடாபியின் இறுதி நாட்கள் பற்றிய விபரங்களை வெளியுலகுக்கு முதன்முதலில் தெரிவித்துள்ளார்.  வெளிநாட்டு மீடியாக்கள் அடங்கிய பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் பேசுவதற்கு இவர் அனுமதிக்கப்பட்டார்.   அப்போது தாவோ கூறிய விபரங்கள்தான் கடாபியின் இறுதித் தினங்கள் பற்றி தற்போது உள்ள ஒரேயொரு பதிவு.

ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் சீசர்

அகஸ்ட்டஸ் (செப்டெம்பர் 23, கிமு 63 – ஆகஸ்ட் 19, கிபி 14) ரோமப்பேரரசை  ஆண்டவர். கையஸ் ஒக்டேவியஸ் துரினஸ் என்னும் இயற்பெயர் கொண்ட இவரை, இவரது பெரிய தந்தையான ஜூலியஸ் சீசர்   கிமு 44 ஆம் ஆண்டில் தத்து எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் இவர் கையஸ் ஜூலியஸ் சீசர் ஒக்டேவியஸ் எனப்பட்டார். ஒக்டேவியஸ் கிமு 27 ஆம் ஆண்டிலிருந்து கிபி 14 ஆம் ஆண்டில் அவர் இறக்கும் வரை ரோமப் பேரரசை ஆண்டு வந்தார். கிமு 44 ஆம் ஆண்டில் ஜூலியஸ்சீசர் கொலை செய்யப்பட்ட பின்னர் கிமு 43ல் ஒக்டேவியஸ்,மார்க் ஆன்ரனி, மார்க்கஸ் ஏமிலஸ் லெப்பிடஸ்  ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் முக்கூட்டணியை அமைத்துக் கொண்டு ஒரு இராணுவச் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தனர்.. இது வரலாற்றாளர்களால் இரண்டாவது முக்கூட்டணி  (Second Triumvirate) என அழைக்கப்படுகின்றது. இம் முக்கூட்டணியின் ஒரு உறுப்பினராக அகஸ்ட்டஸ், ரோமையும் அதன் மாகாணங்கள் பலவற்றையும் ஆண்டு வந்தார். காலப்போக்கில், அதிகாரப் போட்டி காரணமாக இம் முக்கூட்டணி சிதைந்து போயிற்று. லெப்பிடஸ் நாடுகடத்தப்பட்டார். கிமு 31 ஆம் ஆண்டில் ஒக்டேவியனுடன் ஆக்டியப் போரில்  ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து மார்க் ஆன்டனி தற்கொலை  செய்து கொண்டார். முக்கூட்டணியி சிதைவுக்குப் பின்னர், ரோமக் குடியரசு. ரோமக் குடியரசைப்  பெயரளவில் மீளமைத்த அகஸ்டஸ், அரசாங்க அதிகாரத்தை செனட் அவைக்குக் கொடுத்திருந்தாலும், நடைமுறையில் தானே அதிகாரம் முழுவதையும் வைத்திருந்தார். பல ஆண்டுகளாக இடம்பெற்ற படிப்படியான நடவடிக்கைகள் மூலம் குடியரசாக இருந்த ரோம், ஒரு தனி மனிதனின் ஆளுகைக்கு உட்பட்டுப் பின்னர் ரோமப் பேரரசு ஆனது.

Saturday, October 29, 2011

சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி

முசோலினி எமிலியா-ரொமக்னா என்னும் ஊரிலுள்ள போர்லி மாகாணத்தினலுள்ள டோவியா டைபிரிடாப்பி என்னும் நகரத்தில் ஓர் உழைக்கும் பாட்டாளியின் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோருக்கு இவரே மூத்தவர் இவரின் உடன் பிறந்தோர் அமோல்டோ  முசோலினி   மற்றும் எட்விக் முசோலினி. இவர் தந்தை பெயர் அலக்சாண்ட்ரோ முசோலினி. இவர் ஒரு இரும்பு அடிக்கும் கொல்லர். இவர் தாய் ரோசா முசோலினி ஆசிரியை. இவர் தாய் கத்தோலிக்க மதத்தில் அதிக இறை பற்றுடையவர்.

கல்வி

முசோலினி சிறு வயதில் தன் தந்தையின் தொழிலுக்கு மிகவும் உதவி புரிந்தார். தந்தையாரின் சீர்திருத்தக் கொள்கையினால் அவருக்கு ஞானஸ்நானம் செய்யப்படவில்லை. தன் தந்தையின் பொதுவுடமை,  சீர்திருத்த கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அதன் காரணமாக மெக்சிக்கன் சீர்திருத்தவாதியான பெனிட்டோ ஜீவாராசின்  பெயரை தன் பெயரோடு சேர்த்து பெனிட்டோ முசோலினி என்று மாற்றி கொண்டார். பிறகு விடுதிப்பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார் அப்பள்ளியில் இவர் செய்த குறும்புகளின் காரணமாக பள்ளியைவிட்டு நீக்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டார், அங்கு சிறப்பானதொரு கல்வி பயின்றார். 1901 ஆம் ஆண்டு பள்ளி இறுதி தேர்வுக்குப்பின் தொடக்க கல்வி ஆசிரியராக அப்பள்ளியிலேயே நியமிக்கப்பட்டார்.


இராணுவத்தில் பணிபுரிதல்

 

1902ம் ஆண்டு முசோலினி தன் சொந்த மண்ணை விட்டு சுவிட்சர்லாந்துக்கு  குடியேறினார்.அங்கு வேலை கிடைக்காமல் குடும்ப வறுமைக்கு தள்ளபட்டார். அதன் சோசலிச இயக்கத்தில் சேர்ந்தனினால் இத்தாலிக்கு நாடு கடத்தப்பட்டு அங்கு தன்னிச்சையாக இராணுவத்தில் சேர்ந்து பணி புரிந்தார். அவருடைய இராணுவப்பணியில் குறைகள் குற்றங்கள் ஏதுமின்றி சிறப்பான பணி புரிந்தார். இத்தகவல்கள் அவருடைய இராணுவத்தொழில் குறிப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1917 வரை இராணுவத்தில் சிறப்பானதொரு பணிபுரிந்தமையால் 40 க்கும் அதிகமான பதக்கங்கள் அவர் உடையை அலங்கரித்தன. அதன்பின் டைபாய்டு விஷக்காய்ச்சலின் காரணமாகவும் மார்ட்டர் வெடிவிபத்தில் சிக்கி விபத்துக்கள்ளானதல் அப்பணியை தொடரமுடியாமல் போனது.

உலகின் அதிசய நீர்ப் பாலம் (படங்கள் இணைப்பு)

கட்டுமான துறையில் பல நம்ப முடியாத, அதிசயிக்ககூடிய வகையில் கட்டங்கள் அமைந்திருந்திரும். அந்த வகையில் பலபேரின் கவனத்தை ஈர்ந்துள்ளது இந்த நீர்பாலம்.

ஜெர்மனியில் நம்பமுடியாத Magdeburg நீர் பாலம் பற்றி யாரும் அறிந்திருப்பீர்களா?

ஜெர்மனியில் அமைந்திருக்கும் 12 கிலோமீற்றர் தூரம் உள்ள நீர் பாலம் இதுவாகும். இதுவே உலகில் உள்ள மிகவும் நீர் பாலம் என குறிப்பிடப்படுகின்றது.

இது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியை இணைக்கும் நோக்கில் கட்டப்பட்டதாகும்.

பொதுவாக ஆற்றினை அல்லது கடலினை கடக்கவே பாலம் அமைப்பது இயல்பு. ஆனால் ஆற்றின் மேலே ஒரு நீர் பாலம் அமைந்திருப்பதே இதன் சிறப்பாகும்.

1930 ஆண்டு கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் இடை நிறுத்தப்பட்ட இதன்  வேலைகள் மீண்டும் 1997ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2003ம் ஆண்டில் நிறைவு பெற்றது. அதன் பின்னர் 2003ம் ஆண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கண்களை பாதுகாப்பதற்கு......

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.

கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும். சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள்.

Tuesday, October 25, 2011

சர்வாதிகாரி கடாபி


   லிபியாவில் 42 ஆண்டுகள் அதிபராக இருந்தவர்  சர்வாதிகாரி கடாபி . இவரது முழுப்பெயர் முயாமர் அபு மின்யர் அல் கடாபி. 1942, ஜூன் 7ல், இத்தாலியின் கட்டுப்பாட்டில் லிபியா இருந்த போது, பிறந்தார். இவரது பள்ளிப் பருவத்தில், உலகில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக புரட்சி நடைபெற்று வந்தது. 1952ல் எகிப்து புரட்சியின் போது காமல் அப்துல் நாசர் என்பவர் அதிபர் பதவியை கைப்பற்றினார்.
           இவரது போராட்டத்தால் கடாபி ஈர்க்கப்பட்டார். 1956ல் இத்தாலிக்கு எதிரான போராட்டத்தில் கடாபி பங்கேற்றார். 1961ல் பெங்காசியில் உள்ள லிபிய ராணுவ அகடமியில் சேர்ந்தார்.

ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் உள்ள லிங்கராஜர் கோயில்

இந்திய மாநிலமான ஒரிசாவின் தலைநகரமான புவனேஸ்வரில் அமைந்துள்ளது. கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றான இக் கோயில் இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்டது. இது இந்துக்களின் புனித யாத்திரைத் தலமும் ஆகும்.
            லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது. லிங்கம் சிவனை வழிபடுவதற்கான ஒரு வடிவம் ஆகும். இது சிவனின், உருவம் உள்ளதும் இல்லாததுமான அருவுருவம் எனப்படுகின்ற திருமேனியைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது.
இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இது இதன் தற்போதைய அமைப்பில், 11 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது.