flashvortex.

Friday, March 30, 2012

நானும், சச்சினும் சிறந்த நண்பர்கள்: டிராவிட்


ராகுல் டிராவிட்டுக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சச்சின் பங்கேற்காததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என்று வதந்தி நிலவியது.
இந்திய கிரிக்கெட் அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்இ கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார்.


16 ஆண்டு காலம் இந்திய அணிக்காக விளையாடிய டிராவிட்டை பெருமைப்படுத்தும் விதத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கடந்த செவ்வாய்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.



இவ்விழாவில் அனில் கும்ளே உள்ளிட்ட முன்னாள் வீரர்கள்இ தற்போதைய இந்திய அணி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஆனால் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்து கொள்ளாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக வதந்திகள் வெளியாயின.


இதனை மறுத்த டிராவிட் கூறுகையில்இ எங்கள் இருவருக்கும் இடையே எந்தவித கருத்து வேறுபாடும் கிடையாது என்றும்இ சச்சின் எனது சிறந்த நண்பர் என்றும்இ பாராட்டு விழாவிற்கு முதல் நாளே அவர் எனக்கு குறுந்தகவல் மூலம் சிகிச்சைக்காக லண்டன் செல்வதால் தன்னால் வர இயலாது என்பதை தெரிவித்து விட்டார் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment