flashvortex.

Saturday, March 24, 2012

விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவரை உருவாக்க அமெரிக்கா முயற்சி! : வீரவன்ச

அமெரிக்காவினால் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 
இலங்கையில் செயற்படும் வொய்ஸ் ஒப் அமெரிக்காவை வெளியேற்ற வேண்டும். வொய்ஸ் ஒப் அமெரிக்கா ஊடாக அந்த நாடு இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்களை  மட்டுமின்றி இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு விடய்ஙகளை ஒட்டுக் கேட்கிறது.  

உலகிற்கே பயங்கரவாதத்தை கொண்டு சென்ற  விடுதலை புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் ஒரு நடவடிக்கையையே இன்று அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

அன்று ஒரு பிரபாகரனை உருவாக்கியது போல் அடுத்து ஒரு உருத்திரகுமாரனை உருவாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரலாகவே இதனைக் கொள்ள முடிகிறது என சாடியுள்ளார் விமல் வீரவன்ச

No comments:

Post a Comment