முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.,க்களில் சிலர், டில்லி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய மின்சார மற்றும் தண்ணீர் கட்டணத்தை, இன்னும் செலுத்தாமல் உள்ளதாகவும், இவர்கள் பாக்கி வைத்துள்ள தொகை, ஆறு கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுபாஷ் அகர்வால் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு டில்லி மாநகராட்சி அளித்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி.,க்களில் சிலர், மின்சார மற்றும் தண்ணீர் கட்டணங்களை, டில்லி மாநகராட்சிக்கு இன்னும் செலுத்தாமல் உள்ளனர். இவ்வாறு செலுத்தப்படாமல் உள்ள தொகை, 6.2 கோடி ரூபாய். முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்மராவ், முன்னாள் அமைச்சர்கள் ராஜேஷ் பைலட், சுனித் தத் மற்றும் ஜானேஸ்வர் மிஸ்ரா, சதுரனான மிஸ்ரா உள்ளிட்டோரும் இதில் அடக்கம்.
இவர்கள் தற்போது உயிருடன் இல்லை.இது தவிர, முன்னாள் பிரதமர் தேவகவுடா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் எம்.பி., சுப்ரமணிய சாமி ஆகியோரும், கட்டண பாக்கி வைத்துள்ளனர். அதிகபட்சமாக, காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.பி., கனி கான் சவுத்ரி, 42 லட்ச ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, March 21, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment