என் காதல் செய்தி
கண்மூடிக் கனவிருந்தேன் கருகிப் போன
கடந்தகாலமே கண்முன்னே நின்றது
நீ தந்துபோன நினைவுகளில்
செல்லரித்தது போக மீதியாய் கொஞ்சம்
எனை தினமும் தின்று கொண்டிருக்கிறது
புரிய மறந்த உன்னிடம் பகிரப்பட்ட
என் உணர்வுகள்- இன்றோ விழி நீரில்
விம்பங்களாய் மட்டும்
உணர்வற்றவன் நீ எப்படி உணர்வாய்?
உனை மறந்து போகும் முயற்சியில் நான் தான்
தோற்றேன் என் காதல் தோற்கவில்லை என்று
இறைவனிடம் நான் வேண்டுகிறேன்
என் காதலை கலைத்து சென்றவனே- உனை
மறுபடி ஒருமுறை பார்த்தே விடக்கூடாது என்று.......
நீங்கிச் சென்றாலும்
கடற்கரை ஓரம்
எத்தனையோ காதல் ஜோடி
நான் மட்டும் தனியாக

என்னுடன் நி இருப்பது
போன்ற ஒரு உணர்வு
நாம் இருவரும்
சேர்ந்து திரிந்த இடமல்லவா
நீ என்னைவிட்டு
சென்ற போதும்
உன் நினைவுகள்
எனக்கு உன்னை
நினைவு படுத்திக்கொண்டே இருகிறதே!
என் நினைவுகள்
உனக்கு என்னை
நினைவு படுத்துகின்றனவா?
நினைவுகள்
இருக்கும்
நினைவுகள் எல்லாம்
என்னை உனக்கு
நினைவுபடுத்திக்
கொண்டு தான் இருக்கும்
உனக்கு என் நினைவுகள்
என்னை நினைவு படுத்தினாலும்
எப்படி உன்னால்
மட்டும் என்னோடு பேசாமல்
இருக்க முடிகிறது என்று

உன் உண்மையான
அன்புக்கு ஏங்கும் ஒரு
பைத்தியக்காரன் நான்.....
நான் கேட்பது
எனக்காய் நீ
வேண்டும் என்று
இருப்பாயா இனியாவது?
தெரிந்துகொள் இல்லையேல்
புரிந்துகொள்...
உன்னால் ஒரு ஜீவன்
செத்துக் கொண்டிருப்பதை.....
மருந்தும் உன்னிடம் தான் உள்ளது பெண்ணே.....
உண்மையான பாசம்!
நீ மட்டும் எனக்குத்தான் என்கிற வார்த்தை!
அதை நிரூபித்துக்காட்டு
அது போதும்
நான் இறந்தாலும் வாழ்வேன்!
-ஜனாவின் பயணம்--
தனிமை
காலங்கள் வசந்தங்களாய் இருந்தாலும்
காதலித்த காலங்கள் வருடங்களாக
நீடித்திருந்தால் காத்திருப்பதும் ஒரு வகை
சுவாரசிய சுகமாகவே இருக்கும்
காலத்தின் கோலத்தை கண்ணீரை
மாற்றியது உன் காதல்........
காதலித்த உன்னை கரம்பிடிக்க
யோசித்தேன் - ஆனால்
கண்கள் முழுவதும் கண்ணீரை
விதைத்து விட்டு
கண்காணாத தேசம் சென்ற
உனக்கு - என்
காதலின் வேதனை எப்போது
புரியப்போகின்றது...........
கட்டி அணைத்து, தொட்டு சென்ற
உன் கைகளும்
கரம்பிடித்து கடலோரம் சென்ற
நாட்களும்
கண்சிமிட்டி கதை சொன்ன
காலங்களும்
கலங்காத ஓவியமாய் நெஞ்சினில்
புதைந்ததடா.......
"காலம் முழுக்க காத்திருப்பேன்- என்
காதலன் வருவான் என"