ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.