flashvortex.

Friday, March 30, 2012

சுதந்திரமாக சுற்றித் திரிந்த பின்லேடன்: ஒசாமாவின் மனைவி பரபரப்பு வாக்குமூலம்


அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு 9 வருடங்கள் ஒசாமா பின்லேடன் தலைமறைவாக இருந்த போது சுதந்திரமாகவே சுற்றித் திரிந்தார் என்று அவரது மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒசாமா பின்லேடன் கடந்தாண்டு மே மாதம் அமெரிக்க இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு தலைமறைவாகவே இருந்த அவரது மூன்று மனைவிகளும்இ இரண்டு குழந்தைகளும் கடந்த சில நாட்களுக்கு முன் பிடிபட்டனர்.


மேலும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள அவர்களிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய விசாரணையில் அவரது மூன்றாவது மனைவி அளித்த வாக்குமூலம் வருமாறு: அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆப்கானிஸ்தானிலிருந்து குழந்தையுடன் மீண்டும் பாகிஸ்தான் திரும்பி விட்டேன்.


சில பாகிஸ்தானிய குடும்பங்களின் உதவியுடன் 7 வீடுகளில் தங்க வைக்கப்பட்டேன். 2002ஆம் ஆண்டு பெசாவருக்கு சென்று மீண்டும் ஒசாமாவுடன் இணைந்து கொண்டேன்.



கென்யா மற்றும் இந்தோனேசியாவில் அல்கொய்தா இயக்கத்தினர் தாக்குதல்களை நடத்திய நிலையில் பின்லேடனை பிடிக்க அமெரிக்கா தீவிரம் காட்டியது.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதி உள்மலைப் பகுதிகளில் குடும்பத்தினரை ஒசாமா தங்க வைத்தார்.

முதலில் ஸ்வாட் பள்ளத்தாக்கின் சங்கலா மாவட்டத்தில் தங்கியிருந்தோம். இஸ்லாமாபாத்தின் வடமேற்கில் 80 மைல் தொலைவில் இது உள்ளது. 8 அல்லது 9 மாதம் இரண்டு வீடுகளில் தான் இருந்தோம்.

அதன் பின் 2003ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்துக்கு மிக அருகில் உள்ள ஹரிபூர் நகருக்கு வந்தோம். 2 ஆண்டுகாலம் வாடகை வீட்டில் வசித்தோம். ஹரிபூரில் தான் இன்னொரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

2004ல் மற்றொரு ஆண் குழந்தையை ஹரிப்பூர் அரசு மருத்துவமனையில் பெற்றெடுத்தேன். ஆனால் இரண்டு அல்லது 3 மணி நேரம் தான் மருத்துவமனையில் இருந்திருப்பேன்.

அப்போது மருத்துவமனையில் போலியான அடையாள அட்டைகளைக் காட்டினேன். 2005ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அபோதாபாத்துக்கு இடம்பெயர்ந்தோம். அபோதாபாத்தில் 2006ஆ-ம் ஆண்டு ஒரு குழந்தையையும்இ 2008ஆம் ஆண்டு மற்றொரு குழந்தையையும் பெற்றெடுத்தேன்.

அபோதாபாத்தில் அமெரிக்க கமாண்டோ படையினர் தாக்குதல் நடத்திய போது பின்லேடனுடன் அதே அறையில் தான் இருந்தேன். அப்போது எனக்கு காலில் குண்டு காயம் ஏற்பட்டது.

இச்சம்பவத்தில் ஒரு மனைவி பஸ்ராஇ பின்லேடனின் சகோதரர் அப்ரர் மற்றும் பின்லேடனின் 20 வயது மகன் கலீல் ஆகியோர் கொல்லப்பட்டனர் என்று அப்துல் பதே தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment