Ads 468x60px

flashvortex.

Featured Posts

.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 05

பெற்றவர்கள் இல்லை என்றால் சொந்தபந்தம் கூட இந்த காலத்தில் யாரையுமே பார்க்காது. தமது குடும்பத்தை பார்க்கவே  அவர்களுக்கு முடியாத போது சொந்தமாய் இருந்தாலும் மற்றவர்களின் குடும்ப சுமையை யார்தான் ஏற்க முன்வருவார்கள்.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 04

எந்தவொரு மனிதனும் வாழ்வில் சந்தோசமாகவும் எல்லோரும் மதிக்கத்தக்கவகையிலும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்கு பணமும் வழிவகுக்கின்றது. வாழ்வில் எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என எண்ணும் மனிதர்கள் பொருளாதார ரீதியிலும் உயரவேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் என்ன கஸ்ரப்பட்டாவது தாம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தம்மிடம் இருக்கும் சொத்தினை வட்டிக்கு அடகு வைத்து தமது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 03

வெளிநாட்டு; கனவில் ஆரம்பித்த இவள் படகேறிச்செல்ல தனது கணவனை அனுப்புவதற்காய் கடலோடு விளையாடிய யாழ் குருநகர் பகுதியை சேர்ந்த மரியா தீர்மாணித்தாள். இதனால் பறிபோனது இவள் உயிர் மட்டுமே. எங்கும் இதே கதை தான் தனது ஒன்றரை வயத மகளை விட்டு எவ்வாறு இப்படி ஒரு முடிவினை தேடிக்கொண்டாள் மரியா?

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 02

'எப்படித்தான் இந்த பிஞ்சுக்குழந்தையை விட்டுட்டு போக இவளுக்கு மனசு வந்திச்சுதோ? அந்த கடவுள் தான் காப்பாத்தி இந்த பிள்ளையளுக்கு தாய குடுத்திருக்கு' என்று ஒரு வயது சின்ன
குழந்தையினை இடுப்பில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் சோபா.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 01

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. சாவுகள் வேதனைகள் இனி தமிழ்ச் சமூகத்தை சூழாது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற காலமிது. பின்னங் கால் பிடரியில் பட படுதுயரங்களோடு பாதுகாத்து வந்த உயிர்கள் பக்குவமாய் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.

Tuesday, October 30, 2012

புத்துயிர் பெற்றுவரும் நெசவுக் கைத்தொழில்



ஆடைகள் உடுபிடவைகள் போன்றவற்றிற்கு இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாமே தமது ஆடைகளை நெய்து உடுத்த வரலாறுகள் உண்டு. அன்றைய காலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த நெசவுக் கைத்தொழில் இருந்துள்ளன.

பள்ளி இல்லாத கிராமம் கல்விக்கு ஏங்கும் சிறுவர்கள்


தெல்லிப்பளை கொல்லங்கலட்டி 22 வருடங்களின் பின் தமது சொந்த மக்களை பார்த்து பூரித்து நின்றது. அப் பூரிப்பில் மக்களும்.

ஆனால் வளம் கொழிக்கும்  இப் பூமியில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மீள்குடியேறி உள்ளனர் மக்கள். இங்கு தான் 5வயது சிறுமியான குலக்சிகாவின் உள்ளிட்ட  பல சிறுவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப்போகிறது.