flashvortex.

Friday, March 23, 2012

சிறீலங்காவிற்கு புத்துயிர் அளிக்கும் ஜெனிவா தீர்மானம் : ஹிலாரி கிளின்டன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்தார்.

சிறீலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக  வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

தீர்மான வெற்றி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"நிரந்த நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஊடாகவே மாத்திரம் சிறீலங்காவில் நிரந்தர சமாதனத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான சமிஞ்சையை ஐக்கிய அமெரிக்கா சர்வதேச சமூகத்துடன் இணைந்து வழங்கியுள்ளது.

அத்துடன், வெளிநாட்டு சமூகம் உதவுதற்கு தயாரகவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மிக தெளிவாகவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான சிபாரிசுகளை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் பொறுப்பு கூறலுக்கு தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சரியான இலக்கியை அடைவதற்கு உதவி செய்யவும் அமெரிக்கா தயாராகவுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை விரைவில் சந்திக்கவுள்ளேன்.

சிறீலங்கா அரசுடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் உறவினை தொடர்ந்து கட்டியொழுப்பவும் அமெரிக்கா எப்பவும் தயாராக இருப்பதாக ஹிலாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment