நாம் எத்தனையோ பெண்களை பார்க்கிறோம் பழகுகிறோம் ஆனாலும் நாம் பார்க்கும், பழகும் எல்லா பெண்களையும் நமக்கு பிடித்து விடுவதில்லை நமக்கு பிடித்தஒரு பெண்ணைதான் நாம் விரும்பி காதலியாக்கிக் கொள்வோம் அப்படிப்பட்ட அழகான ஒரு காதல் மலர்ந்து வருவது நமக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் அந்த வேளைகளில் இனி அவளுடனேயே ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட வேண்டும், அவளையேநம் வாழ்க்கையின் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமது விருப்பங்கள் நம்மிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்
நமது மனதில் ஊடுருவி விட்ட அவளின் ஒவ்வொரு செயலும் நமக்கு பிடித்துவிடும்அவள் எதை செய்தாலும் அவளை குற்றம் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு அவள் சொல்லும் சின்ன சின்ன பொய்களையும் தவறுகளையும் ரசித்து ரசித்து பழகிவிடுவோம் அப்படிப்பட்ட நாம் ஒரு நாள் அவளையே பிரிந்து விடுகிற கட்டாயம் ஏற்படும் போது அதனுடைய ஆழமான வலிகள் நம்மை எங்கேயோ தூரத்தில் கொண்டு சென்று விட்டு விடுகின்றது அங்கே எதுவும் நம்மை ஆறுதல்படுத்த முடிவதில்லை