flashvortex.

Thursday, March 22, 2012

டில்சான் தொடர்பான செய்திக்கு இலங்கை கிரிக்கெட் சபை கவலை

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சகல துறை வீரருமான டி.எம்.திலகரட்ண டில்சான் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திக்கு இலங்கை கிரிக்கெட் சபை கவலை வெளியிட்டுள்ளது. 

குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என எதிர்வரும் நாட்களில் தெளிவாகும் எனவும் கூறியுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இவ்வாறான கருத்துக்கள் ஊடகங்களில் வெளியானமை குறித்து கிரிக்கெட் சபை கவலையடைந்துள்ளதாகவும் குறித்த தொடரில் அனைத்து துறைகளிலும் டில்சானின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment