flashvortex.

Wednesday, March 21, 2012

விஜயகாந்தை கண்டித்து ரிஷிவந்தியத்தில் மறியல்

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ., விஜயகாந்தை கண்டித்து, பகண்டை கூட்ரோட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் சாலை மறியல் நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட அரும்பராம்பட்டு, ஆர்க்கவாடி கிராமங்களுக்கு இடையே செல்லும் முஸ்குந்தா நதி மீது விரைவில் பாலம் கட்டுவதாகவும், ஆர்க்கவாடி கிராமத்திற்கு பஸ் வசதி செய்து தருவதாகவும் வாக்குறுதியளித்த விஜயகாந்த் இதுவரை அதை செயல்படுத்தாததை கண்டித்தும், கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு எவ்வித முயற்சியும் எடுக்காத எம்.பி., ஆதிசங்கரை கண்டித்தும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகம் எதிரில் சங்கராபுரம், திருக்கோவிலூர் சாலையில், நேற்று மதியம் 12 மணிக்கு சாலை மறியல் நடத்தினர்.



 மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய குழு உறுப்பினர் சரவணன், மாநில துணை தலைவர் டேவிட் குமார் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் 12.30 மணிக்கு அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்திய கம்யூ., ஒன்றிய செயலர் அப்பாவு, அரும்பராம்பட்டு ஊராட்சி தலைவர் தேவேந்திரன் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment