மனித உரிமைக் காவலர்களின் சூழ்நிலை தொடர்பான விசேட அறிக்கையாளர் மார்கரெட் சேகாக்யா இது தொடர்பாக கூறுகையில், இலங்கையில் மனித உரிமைக் காவலர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தனது ஆணைக்குட்பட்ட பாதுகாப்பை கோரினால் பதிலடியை எதிர்நோக்குவதாக தெரிவித்தார். தேசிய ஊடகங்களின் பாதுகாப்பாளர்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் சகிதம் தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலை தனது பெரும் கவலைக்குரியதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக ஆராய்வதற்கு சர்வதேச பொறிமுறையொன்று தேவையென ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக கூட்டத்தொடரில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. பொறுப்புடைமை தொடர்பாக இலங்கை சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள போதிலும் அவை அனைத்துமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகுவதற்குமுன், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படக்கூடிய தீர்மானமொன்றை தவிர்ப்பதற்கான அவசர செயற்பாடுகளாகும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. |
No comments:
Post a Comment