flashvortex.

Thursday, March 15, 2012

அணி திரண்டது மேற்குலகம் - திணறிப் போன சிறீலங்கா பிரதிநிதிகள்

போர்க்குற்றம் தொடர்பில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரனை தொடர்பான விசாரணைகள் ஆரம்பாகியுள்ளன. 

இதன் போது ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், நோர்வே, கனடா, பெல்ஜியம், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகள், சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டினை வைத்ததுடன் சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினரையும் கண்டித்தும் பேசினர். 

மேற்குலகின் கருத்தாடலுக்கு பதிலளிக்க முடியாமல் சிறீலங்கா பிரதிநிதிகள் திண்டாடிப் போனதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கு கருத்து தெரிவித்த கனடா பிரதிநிதி,


சிறீலங்காவில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். போர்க் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க அந்நாடு பதிலளிக்க தவறி விட்டது. இதில் ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை கவனிக்கவும் தவறிவிட்டன. சர்வதேச சட்டங்களுக்கு புறம்பாக நடந்த மனித உரிமை மீறல்கள், குற்றங்கள் குறித்து சுதந்திரமான விசாரணை தேவை என்றார்.   

சிறீலங்காவிற்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானத்தை ஆதரிப்பதாக இங்கிலாந்து பிரதிநிதி தனது விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

அவர் பேசுகையில், மனித உரிமைகள் மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை களைய சிறீலங்கா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.

நோர்வே பிரதிநிதி கருத்து தெரிவிக்கையில்,

சிறீலங்காவில் நடந்த சர்வதேச சட்ட மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளுக்கு காலதாமதமின்றி பதிலளிக்க வேண்டும். அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை நாங்கள் முழுமனதுடன் ஆதரிக்கிறோம் என்றார்.

இதேபோல டென்மார்க், பிரான்ஸ், அவுஸ்திரேலியா நாட்டு பிரதிநிதிகளும் சிறீலங்காவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

சர்வதேச நீதியாளர் ஆணையம் என்ற அமைப்பு இதில் வார்த்தைஜாலம் வேண்டாம், செயல்தான் முக்கியம், கால விரயம் செய்யாமல் சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை, மஹிந்த ராஜபக்சே கடந்த 3 ஆண்டுகளாக தனது பொறுப்பில் இருந்து தவறி விட்டார்.

சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், சர்வதேச சட்டங்கள் ஆகிய வற்றுக்கு புறம்பாக அவர் செயல்பட்டுள்ளார் என குற்றம் சாட்டியது.

இதற்கு பதில் அளித்த சிறீலங்காவின் பிரதிநிதிகள், உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு தேவையில்லை. எங்கள் நாட்டு விவகாரத்தை நாங்களே கவனித்துக் கொள்வோம் என்றனர்.

No comments:

Post a Comment