flashvortex.

Saturday, February 4, 2012

யாழில் நவீன முறையிலான ஹோட்டல்

யாழ். மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதன் ஓர் அங்கமாக நவீன முறையிலான ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதியில் புதிதாக நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. 

இந்த ஹோட்டலுக்கான அடிக்கல்லினை பிரதமர் தி.மு. ஜயரட்ண நாட்டி வைத்ததுடன் நினைவுப படிகத்தையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.

14 மாடிகளைக் கொண்டதாக அமையப்பெறவுள்ள இந்த ஹோட்டல் ரூபா 75 கோடி செலவில் 65 அறைகளைக் கொண்டதாக நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது. 












No comments:

Post a Comment