அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய போவதாக பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்திருந்த 20 வயது இளைஞர் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோகுயின் அமோதர் செராபியோ என்ற அந் நபர் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இவர் ஒபாமாவின் தென் புளோரிட விஜயத்தின் போது சுட்டுக்கொல்ல உள்ளதாக பேஸ்புக்கில் போலி கணக்கொன்றினை உருவாக்கி அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்காட்சி அடங்கிய காணொளியை யுடியூபில் தரவேற்றம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி தனக்கு யாராவது உதவி செய்ய விரும்புகிறீர்களா என பேஸ்புக்கில் கேட்டுமுள்ளார்.
இத்தகவல் வெளியில் தெரிய வரவே அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
எனினும் மேற்படி சம்பவம் தொடர்பில் அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___
Wednesday, February 29, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment