flashvortex.

Friday, February 17, 2012

சீனாவில் கப்பல்கள் மோதல் 19 பேர் மீட்பு: 3 பேர் கதி என்ன?

சீனாவில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது, மற்றொரு சரக்கு கப்பல் மோதிய விபத்தில் 19 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.


சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில், தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல், கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர், கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதே வழியாக வந்த மற்றொரு சரக்கு கப்பல் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.

No comments:

Post a Comment