flashvortex.

Friday, February 24, 2012

இலங்கையில் பாணின் விலை அதிகரிப்பு

இலங்கையில் மக்களின் அன்றாட முக்கிய உணவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 50 ரூபாவாக இருந்துவந்த 450 கிராம் பாணின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கிறது.
எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட உற்பத்திச் செலவு அதிகரிப்பே இந்த விலையேற்றத்துக்கு காரணம் என்று பேக்கரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தால் போக்குவரத்து துறை உட்பட பல துறைகள் இலங்கையில் சிரமத்தை எதிர்நோக்கும் நிலையில் பேக்கரி உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

No comments:

Post a Comment