ஐக்கிய அமெரிக்காவின் முக்கிய விசேட பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த வாரமளவில் சிறீலங்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறீலங்கா செல்லும் அமெரிக்க குழுவில் மூன்று பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறீலங்கா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தக உறவை பலப்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை வருவதாக ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் ஜெனிவாவில் சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதால் அதுகுறித்து ஆராய இக்குழு சிறீலங்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, April 1, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment