flashvortex.

Sunday, April 1, 2012

யாழில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வுகள்!


தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகர் மூதறிஞர் தந்தை செல்வாவின் 114 வது பிற்ந்த தின நிகழ்வுகள் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் நல்லூர் நாவலர் கலர்சசார மண்டபத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் மங்கள விளக்கினை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளா வீ.ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (பத்மநாபா அணி) தலைவர் சுரேஸ் பிறேமச்ச்சந்திரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை முன்னனித் தலைவர் சித்தாத்தன், தமிழரசுக்கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் உட்பட வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் உட்பட மற்றும் பலர் ஏற்றி வைத்தனர்.

தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்க்கு கட்சிகளின் தலைவர்களினால் மாலைகள் அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நினைவஞ்சலிக் கூட்டமும் இடம் பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவசக்தி ஆனந்தன் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் சித்தாத்தன் சிற்றம்பலம் உட்பட மற்றும் பலர் உரையாற்றினார்கள்.

பிரதேச சபைத் தலைவர்கள் உறுப்பினர்கள், ஆதாரவாளர்கள பொது மக்கள் எனப் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.


No comments:

Post a Comment