flashvortex.

Tuesday, December 27, 2011

மஹேல ஜெயவர்த்தனா


இன்றைய உலகின் தலை சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவர்,இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றின் தலை சிறந்த டெஸ்ட்வீரர்,ஐசிசி தர வரிசையில் முதல்தடவையாக முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகிலேயே அதிக டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற வீரர் இவர்தான் என்ற போதும் தரப்படுத்தலின் ஏனைய காரணிகளால் மூன்றாம் நான்காம் இடங்களில் இருந்து வந்த மஹேல,முதல் முறையாக முதல் இடத்தினைப் பிடித்துள்ளார்.

கடந்த இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் ஒன்பதாயிரம் ஓட்டங்களை கடந்து பல சாதனைகளையும் மைல்கற்களையும் கண்ட மகேலவுக்கு சாதனைகள் ஒன்றும் புதிதல்ல.ஏனெனில் இவரது அறிமுகப்போட்டியே ஒரு உலக சாதனைப்போட்டி.டெஸ்ட் வரலாற்றின் ஒரு இன்னிங்க்சில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணியாக இலங்கை தன்னைப் பதிவுசெய்த போட்டிதான் மகேலவின் அறிமுக போட்டி,ராமர்பாலம் கட்ட அணில் உதவியது போல 952 ஓட்டங்களில் மகேலவும் தனதுபங்காக 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.இவர் ஆடு களத்தில் முதல்முறை ஆடவந்த போது மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்தவர் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த.இப்படித் தான் ஆரம்பமானது இவரின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு .மஹேல தனது முதல் சதத்தினை நான்காவது போட்டியிலேயே பதிவு செய்தார்.காலி மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களை குவிக்க முடியாத ஆடுகளத்தில்,நியுசிலந்துடன் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்து அழுத்தங்களுடன்(under pressure) ஆடிய இலங்கை அணியில் சனத்,அரவிந்த,ரணதுங்க போன்றோர் தடுமாறி வரிசையாக ஆட்டமிழக்க "இளங் கன்று பயமறியாது "என்பது போல அனாயசமாக ஆடி 167 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி வெற்றிக்கு பாலம் அமைத்தார்.தனது ஏழாவது போட்டியிலேயே இந்தியாவுடன் இரட்டை சதமடித்து உலகினை தன்பக்கம் திரும்ப வைத்தார்,இது தான் மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்ற முதல்சதம். கும்ப்ளேயும்,ஹர்பஜனும் விக்கட்டுகளை மறுகரையால் சரிக்க,ஒருபுறம் மகேலவோ நிதானமும் அதிரடியும் கலந்து Bating விருந்து அளித்து கொண்டிருந்தார்.இங்கு நான் கண்டிப்பாக எஸ்.எஸ்.சி க்கும் மகேலவுக்குமான ராசி பற்றி சொல்லியே ஆக வேண்டும்.எஸ்.எஸ்.சி தான் மஹேலவின் சொந்த மைதானம்.இவர் சிறு வயதிலிருந்து இந்தக்கழகத்திற்கே ஆடி வருவதால் இவருக்கு இந்த மைதானம் அத்துப்படி.என்னதான் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கோ,சுழலுக்கோ சாதகமாய் இருந்தாலும் இங்கே பந்து மஹேல சொல்தான் கேட்கும்.எந்த புல்லில் பட்டால் பந்து எந்தவேகத்தில் செல்லும் என்றுகூட மகேலவுக்கு தெரியும் என இலங்கை வர்ணனையாளர் ஒருவர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.இதற்கு இவர் இந்தமைதானத்தில் பெற்றிருக்கும் பெறுபேறுகள் சான்று.22 போட்டிகளில் 2467 ஓட்டங்கள்,அதில் ஒன்பது சதங்கள்.ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த ஓட்டங்கள் எனும் சாதனைக்கு மஹேல சொந்தக்காரர்.டான் பிரட்மன் எம்.சி.ஜி யில் பெற்ற ஒன்பது சதங்களுக்கான சாதனையை மஹேல எஸ்.எஸ்.சி யில் பெற்றிருக்கும் ஒன்பது சதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இச்சாதனையினை முறியடிக்க வந்த வாய்ப்புகளை நியுசிலந்துடன் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும் தொன்னூறுகளில் ஆட்டமிழந்த்ததால் தவறவிட்ட மகேலவுக்கு இந்த சாதனையினை முறியடிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.இப்படியே இது தொடர்ந்தால்,மஹேல ஆடும்வரை எஸ்.எஸ்.சி யில் போட்டிகள் வேண்டாம் என்று உலகநாடுகள் அனைத்தும் ஐ.சி.சி க்கு மனு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.உயர்வேகத்தில் மேலேசென்று கொண்டிருந்த மகேலவின் கிரிக்கெட் வாழ்க்கையில் தடைக் கல் போலத்தான் அமைந்தது அந்த 2003 உலக கிண்ணம்.ஒன்பது போட்டிகளில் வெறும் 21 ஓட்டங்களையே பெற்றார் மஹேல.இன்னமும் சிலர் இதனையே கூறி மகெலவை விமர்சனம் செய்து அற்பசந்தோசம் கண்டு கொள்கிறார்கள்.ஆனால் அதே உலககிண்ணத்தில் பாகிஸ்தான் வரலாற்றின் தலைசிறந்த வீரர் இன்சமாம் மகேலவை விட குறைவான ஓட்டங்களையே பெற்றிருந்தார்.அதற்காக இன்சமாமும் பல விமர்சனங்களுக்கு ஆளானார்.அதிர்ஷ்டம் திறமயைத் தீண்டலாம்,ஆனால் திருடிவிடமுடியாது.அணியில் இருந்தே விலக்கப்பட்ட மஹேல இரண்டு வருடங்களின் பின் அணித்தலைவராய் பொறுப்பேற்று அணியை 2007 உலக கோப்பை இறுதியாட்டம் வரை கொண்டு சென்றது மட்டுமல்லாமல் எப்படி 2003 உலககோப்பையில் இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இருந்தாரோ அதேபோல் இம்முறை அதிகஓட்டங்கள் பெற்றவர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தார். இது அவரது திறமைக்கு ஒருசான்று.cover drive,on drive.leg glance,pullshot,hookshot,squarecut,improviseshot களான latecut,paddlesweep,inside out என அனைத்து shot களையும் துல்லியமாக ஆட கூடிய ஒரு சில வீரர்களில் மகேலவும் ஒருவர்.ஒரு முழுமையான இன்னிங்க்ஸ் மகேல ஆடினால் அதனை ஒரு பாடமாக சொல்லகூடியது போல் இருக்கும்.டெஸ்ட் போட்டிகளில் அந்தந்த பந்துகளுக்கு ஏற்றாட்போல ஆடும் மகேல ஒருநாள் போட்டிகளில் அதனை சரியாக கையாளாதது அவரின் திறமைக்கு குறைவான ஒருநாள் பெறு பேற்றுக்கு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.இன்னிங்க்ஸ் ஆரம்பத்திலேயே cover drive போன்ற shots தேர்வு செய்வது பல சமயம் இவரின் விக்கடை பறிகொடுக்க காரணமாக இருந்துள்ளது,மற்றும் 40 ஓவர்கள் வந்து விட்டால் ஒவ்வொரு பந்தும் அடிக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆடுவதால் தனது விக்கட்டை தானே பல தடவை எதிரணியினருக்கு கொடுத்துள்ளார்( he throw his wicket).சில சுயநல ஆட்டம் ஆடும் வீரர்கள்போல் 48,49 ovar வரை நிதானமாக ஆடியிருந்தால் இன்னும் சிறப்பான பெறுபேறுகள் கிடைத்திருக்கும்,ஆனால் தனது சுபாவத்தை மாற்றமுடியாதுள்ளதாக மஹேல பலதடவை தானே குறிப்பிட்டுள்ளார். மகேல தன் திறமையினை விட குறைந்த ஓட்டங்களையே ஒருநாள் போட்டிகளில் பெற்றிருக்கும் போதும் அவர் சதம் அடித்த (11 தடவையும் ) அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிக்கனியை சுவைத்துள்ளது என்பதிலிருந்து அவர் சுயநல ஆட்டம் ஆடுவதில்லை என்பது கண்கூடு.
இவரின் திறமைகள் உச்சத்தைதொட்ட காலம் இவர் அணித்தலைவராய் பொறுப்பேற்ற பின்னர்தான்.இங்கிலாந்து லோர்ட்ஸ் மைதானத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்த இலங்கையினை மீட்டெடுத்து சமநிலைப்படுத்த தோள்கொடுத்தார்,பின்னர் ஒரு நாள் தொடரினை 5-௦0 என இலங்கை வென்ற போது மஹேல தொடர்ச்சியாக இரண்டு சதமடித்தார்.இவரது தலைமையின் கீழ் இலங்கை ஒருநாள் போட்டியிலும் (443),T௦/20௦ போட்டியிலும்(260) அதி கூடிய ஓட்டங்களை பெற்ற உலக சாதனையினை பதிவு செய்தது.இவரது தலைமையிலான இலங்கையணி மேற்கிந்தியதீவுகளில் வைத்து முதல் டெஸ்ட் வெற்றியை இலங்கைக்கு பெற்று தந்தது ,ஆசியகொப்பையை மீண்டும் தக்கவைத்துக்கொண்ட மகேல இங்கிலாந்து , நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என்பவற்றில் நடந்த தொடர்களில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்திருந்தார்.மற்றும் ஆசிய அணிக்கு தலைமை தாங்கி ஆபிரிக்க அணிக்கு எதிராக 3போட்டிகளிலும் வெற்றி பெற்று கொடுத்ததொடல்லாமல் அந்த தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவாகியது மகேலாவின் தலைமைத்துவத்தின் சிறப்பான தகமைக்கு இன்னுமொரு எடுத்துகாட்டு.சொந்த மண்ணில் தென்ஆபிரிக்காவுடனான டெஸ்ட் தொடர் சாதனைகளுக்கான தொடராக மாறியது.தான்விளையாடிய முதல் போட்டியில் இலங்கை வீரர்ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக சனத் ஏற்படுத்திய சாதனையை முறியடித்து வலதுகை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களுக்கான(374) உலக சாதனையை நிலைநாட்டினார்.தனது நெருங்கிய நண்பரான சங்காவுடன் பெற்ற இணைப்பாட்டம் கிரிக்கெட் வரலாற்றின் எந்த ஒரு விக்கட்டுகுமான சாதனை இணைப்பாட்டம்.ஆனால் எனக்கு என்னமோ அந்த 374ஐ விட இரண்டாவது போட்டியில் மஹேல பெற்ற 123 ஓட்டங்கள் தான் அவரது தலைமை பொறுப்பின் இயல்பை காட்டியது.அந்த போட்டியில் 352 என்ற இலக்கை அடைந்தது இலங்கை அணியின் வெற்றிகரமான நான்காம் இன்னிங்சுக்கான சாதனை.(successfull runchase in the 4th innings)யார் கண் பட்டதோ அதன் பின் ஒரு நாள் போட்டிகளில் மஹேல சோபிக்கவில்லை,2007 உலக கிண்ணத்தின் முன் வல்லுனர்கள் கணிப்புபடி மகேலவின் போம் இலங்கைக்கு பின்னடைவு என்று எதிர்வுகூறப்பட்டது.ஏனெனில் அதற்கு முன் மஹேல பதினேழு போட்டிகளாக அரை சதம் ஒன்றை கூட பெறவில்லை.ஆனால் எந்த மகேலவின் போர்ம்(out of form)இலங்கைக்கு பின்னடைவாக கூறப் பட்டதோ அதுவே இலங்கையினை இறுதிப் போட்டிவரை கூட்டி சென்றது என்றால் அது மிகை அல்ல.அதுவும் அந்த அரைஇறுதி போட்டி,அந்த இன்னிங்க்ஸ் ஒருபாடம்,பொறுமை,நிதானம்,வேகம் அனைத்தும் கலந்துகட்டி அடித்த ஒருவிருந்து.சபீனாபார்க் மைதானம் இனி அப்படி ஒரு இன்னிங்க்ஸ் காணுமா என்பது சந்தேகமே.நான் ரணதுங்க தலைமை வகித்த போட்டிகள் அவளவாக பார்த்ததில்லை,பார்த்தாலும் அதை பகுத்தறியும் வயதுமில்லை.ஆனால் அர்ஜுனவின் பின்,அர்ஜுனவை விட ஆளுமை மிகுந்த தலைவராக மகேல விளங்கினார் என்று பலர் கூற கேட்டிருக்கிறேன்.தலைமையை கூட ரசிக்க வைத்த ஒரு தலைவராக மகேல விளங்கினார்.தலைமை மூலம் போட்டிகளை மாற்ற முடியும் என்று விளங்க வைத்தவர்.களத்தடுப்பு பிரயோகங்கள் வீரர்களுக்கு ஏற்றது போல அமைத்து பல யுக்திகளை கையாண்டார்.ஒரு தலைவராக மகேல அனைவரின் பாராட்டையும் பெற்றிருந்தார். இவரது திறமைக்கு இரண்டு ஆண்டுகள் தலைமை போதாதுதான்.ஆனால் அவர் எடுத்த சொந்தமுடிவு என்பதால் அது சரியாகவே இருக்கும்.சாதனைகள் பலவில் மகேல இடம்பெற்றாலும் மகேல உலகளவில் பெரிதளவில் அவதானிக்க படவில்லை.அதற்கு கரணம் மகேல அறிமுகமான போது ஜாம்பவான்களான அர்ஜுன ,அரவிந்த ,சனத் போன்றோர் இருந்தனர்.அவர்கள் ஓய்வு பெற்ற போது மகேல வீழ்ச்சி (உலக கிண்ணம் 2003 ) கண்டிருந்தார் .எனவே அந்தவேளை பிரகாசிக்க ஆரம்பித்த சங்கா அவதானிக்கப்பட்டு பின்னர் ஆங்கில வர்ணனையாளர்கள் மூலம் சங்கா விளம்பர படுத்தப்பட்டார்.இதனாலோ என்னமோ மஹேல இதுவரை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.வெளிநாட்டு மைதானங்களில் மகேல சோபிப்பதில்லை என்று ஒரு கருத்து உள்ளது இது முற்றிலும் தவறானது.உள்நாட்டில் சோபிக்கும் அளவு வெளிநாடுகளில் சோபிப்பதில்லை என்று கூறுதல் சரியாக இருக்கும், இதற்கு வெளிநாடுகளில் இலங்கை அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததும்,இளம் வயதில் வழங்கப்பட்ட உபதலைவர் பொறுப்பும்,சில வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது மகேல சிறந்த போமில் இல்லாததுமே காரணங்மாகும்.ஆனால் தற்போது கடைசியாக பெற்ற 14 சத்தங்களில் 7 சத்தங்கள் வெளிநாடுகளில் பெறப்பட்டதாகும்,மகேல டெஸ்ட் சதத்தை பெறாத ஒரேநாடு தென்னாபிரிக்கா.அங்கும் 98 ஓட்டங்களில் துரதிர்ஷ்டதால் சதத்தை தவற விட்டிருந்தார்.மற்றும் மகேலவின் 11ஒருநாள் சதங்களில் 8 வெளிநாடுகளில் பெறப் பட்டவை.அனைத்து நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலாவிற்கு அனைத்து நாடுகளிலும் சதமடிக்க தென்னாபிரிக்காவில் ஒருசதம் மட்டுமே தேவையாக உள்ளது,அடுத்த தென்னாபிரிக்க தொடதுக்காக காத்திருப்போம்.இனிவரும் வெளிநாட்டுதொடர்களில் சாதிக்கபோகும் மகேலாவை நீங்கள் காணலாம்.மகேலாவின் சாதனைகள்1.வலது கை துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம் ,374 ஓட்டம்2.ஒரு மைதானத்தில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டம், 2467 ஓட்டங்கள்,22 போட்டிகளில் s.s.c மைதானம்3.ஒரு நாள் போட்டிகளில் அதிகமான பிடிகள்,165 பிடிகள்4.ஒரு பந்து வீச்சாளருக்கு அதிகமான பிடிகள், டெஸ்ட் போட்டிகளில் , முரளியின் பந்துவீச்சுக்கு 75 பிடிகள்5.டெஸ்ட் போட்டிகளில் எந்தவொரு விக்கட்டுக்குமான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்6.டெஸ்ட் போட்டிகளில் மூன்றாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 626 ஓட்டங்கள்,குமார் சங்ககாராவுடன் இணைந்து ssc மைதானத்தில் தென்னாபிரிக்காவுடன்7.டெஸ்ட் போட்டிகளில் நான்காம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 437 ஓட்டங்கள்,திலான் சமரவீராவுடன் இணைந்து கராச்சி மைதானத்தில் பாகிஸ்தானுடன்8.டெஸ்ட் போட்டிகளில் ஆறாம் விக்காட்டுக்கான இணைப்பாட்டசாதனை 351 ஓட்டங்கள் , பிரசன்ன ஜெயவர்த்தனவுடன் இணைந்து அகமதாபாத் மைதானத்தில் இந்தியாவுடன்9.ஒருநாள் போட்டிகளில் ஆறாம் விக்கட்டுக்கான இணைப்பாட்டசாதனை 218 ஓட்டங்கள், மகேந்திரசிங் டோனியுடன் இணைந்து சேப்பாக்கம் மைதானத்தில் ஆபிரிக்கஅணியுடன்10. ஆசிய நாடுகள் நான்கிலும்(இலங்கை, இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ்) 150+ ஓட்டங்களை பெற்ற முதல் மற்றும் ஒரேவீரர்.இங்கிலாந்தில் வழங்கப்படும் விளையாட்டுக்கான அதி உயர் விருதான் விஸ்டன் விருது , மற்றும் I.C.C வழங்கிய சிறந்த அணித்தலைவருக்கான விருதும் மகேலாவின் திறமைக்கு ஏனைய சான்றுகள்.தொடர்ந்து இதேமாதிரி தொடர்ச்சியாக ஓட்டங்களை குவிக்கும் பட்சத்தில் 32 வயது மட்டுமேயான மகேலவால் டெஸ்ட் போட்டிகளின் மொத்த ஓட்டங்கள்,சதங்கள் இவற்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டையுமே முறியடிக்கும் வாய்ப்புள்ளது. இலங்கை வருடத்திற்கு 10 டெஸ்ட் போட்டிகள் விளையாடினால் இது சாத்தியமே. மகேல தொடர்ந்தும் மின்னுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

3 comments:

  1. அடேங்கப்பா... இவ்வளவு தகவல்...
    அருமையான பதிவு நண்பா..
    2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மஹேல’வின் செஞ்சுரி மறக்க முடியாது.

    ReplyDelete
  2. ya kandipa marakka mudiyathu mohamed.............

    ReplyDelete
  3. enakku rompa pidisa mahela patti poddirukku thanks for u

    ReplyDelete