மனைவி தன்னை அழகுப்படுத்தியும், முகம் மலர்ந்தும் இருந்தால் கணவன் எதிர் வீட்டு ஜன்னலை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.உங்கள் மாமியாரை நீங்கள் மதித்தால், உங்களுக்கு வரும் மருமகளும் உங்களை மதிப்பாள்.
குடும்பத்தில் நடக்கும் விவகாரங்களை பற்றி வெளியே சென்று தூற்றுகின்ற பெண் ஆனவள், அந்த வீட்டுக்கே எமனாக ஆகிறாள்.நல்ல குணம் கொண்ட மனைவி கிடைப்பது விமானத்தில் செல்வது போன்றதாகும். முரட்டு மனைவி கிடைத்தால் கட்டை வண்டிதான் வாழ்க்கை.
கணவன் உண்டபின் உண்டு, உறங்கிய பின் உறங்கி, காலையில் அவன் எழுவதற்கு முன் எழுவார்கள் பதிவிரதைகள்.
முன் காலத்தில் அதிகாலையில் எழுந்தவுடன் கணவன் காலை தொட்டு கும்பிடுவார்கள் பெண்கள். இப்போது காலை தொட்டு கும்பிட வேண்டாம், கணவன் வரும்போது நீட்டிய காலை மடக்கினாலே போதும் என்கிறார்கள் தற்போதைய தத்துவவாதிகள்.
பெண்களிடம் இருக்க வேண்டிய குணங்கள் பற்றி ஒளவையாரின் அமுத வாக்கினைப் பார்ப்போம்.
தாயானவள் தன் குழந்தையிடம் எவ்வாறு பாசம் காட்டுவாளோ, அப்படி கணவனிடம் பாசம் காட்ட வேண்டும். பணிபுரியும் வேலைக்காரியைப் பால, ஒத்துழைக்க வேண்டும்.
செந்தாமரையில் வீற்றிருக்கும் லட்சுமியைப் போல சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும். கணவன் கோபித்துக் கொண்டாலும், பூமாதேவியைப் போல பொறுமையாக இருக்க வேண்டும். படுக்கை அறையில் கணவனிடம் அன்பு காட்டி அரவணைத்தக் கொள்ள வேண்டும்.
தேவையான போது மந்திரியைப் போல, நல்ல ஆலோசனைகளையும் கூற வேண்டும். இப்படிப்பட்ட குணங்களைப் பெற்ற பெண்ணே இல்லத்திற்கு ஏற்ற இனிய பெண்ணாக இருப்பாள்.
பழமைவாதப் போக்காகக் காணப்படுகின்றது. தற்காலத்தில் ஆண்களை விட பல துறைகளில் பெண்கள்தான் ஆர்வம் காட்டி முன்னேறி வருகின்றார்கள்..இத்தகைய பெண்கள் மேலே கூறிய படி தமது வாழ்க்கையை அமைந்த்துக்கொண்டால் அது அவளது முன்னேற்றத்திற்கு தடையாக( கணவனைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்) காணப்படும் ஆனால் குடும்ப வாழ்க்கை முறையாக அமைந்து காணப்படும்.
ReplyDeleteகுடும்ப வாழ்க்கை, அதன் சந்தோஷம் என்பன ஒரு பெண்னில் மட்டும் தங்கிய விடயமில்லை அது அவளது கணவனில் நடத்தையிலும் தங்கியுள்ளது.
நீங்கள் ஒரு மனைவி எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறிய அதே சமயம் ஒரு கணவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ஏன் என்றால் தற்காலத்தில் அதிகம் பெண்களுக்கு எதிரான் வன்முறைகள் இடம் பெறுகின்றன இது அவளையும் அவள் சார்ந்த வளர்ச்சியையும் முடக்கிவிடுகின்றது.