மாயோனும் சேயோனும் தொல்காப்பியத்தை கண்டுரைத்த பின்னரே காவடி என்ற பதம் உருவானது. காவூதடி என்ற பதம் மருவி காவடி என்ற பதமாக தோற்றம் பெற்றுள்ளது. காவடி பற்றி மறைமலைஅடிகளார் பல கருத்துக்கனை முன் வைத்துள்ளார். அதாவது ஆரம்பத்தில் ஆதிவாசிகள் விலங்குகளை வேட்டையாடி காவுதடியில் கட்டி எட்டிய தூரம் வரை கொண்டு சென்றுள்ளார்கள். பாரம் தூக்கியாக பாவித்த காவு+தடியே காலப்போக்கில் முருகன் ஆலய பால் காவடியாக உருவம் பெற்றுள்ளது.
பாற்காவடி, பன்னீர்க்காவடி என்று ஆரம்பித்த காவடிகள் இன்று பறவைக்காவடி, தூக்குக்காவடி, சந்தனக்காவடி, மச்சக்காவடி, மயில்க்காவடி, சர்ப்பக்காவடி என்று பல வகை உள்ளன. இக்காவடிகள் உலகம் முழுவதும் விரிந்தது நேர்த்தியினாலேயே ஆகும். காவடியாட்டம் முருகன் கோயிலில் மட்டுமன்றி எல்லாக் கோயிலிலும் நேர்த்திக்காக எடுக்கப்படுகின்றது. அதிலும் அம்மன் ஆலயங்களில் பொங்கல் நேரங்களில் அதிகமான காவடிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
காவடிகளை அளவெட்டி, குரும்பசிட்டி, இணுவில், சுழிபுரம், தாவடி, மீசாலை,வடமராட்சி போன்ற இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதைத்தவிர இந்தியாவில் அறுபடை முருகன் கோயிலில் அதிகமான பக்தர்கள் தம் நேர்த்திக்கடன்களை காவடி மூலம் செலுத்துகின்றனர். காவடிகள் தனியே நாதஸ்வரத்துடனும் மேளத்துடனும் ஆடப்படுவதில்லை. பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன. உதாரணமாக சன்னதி முருகன் கோயிலில் காவடிகள் பறைமேளத்துடனும் ஆடப்படுகின்றன.

காவடிகளை ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் எடுப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பாடசாலைகளிலும் முக்கியவிழாக்களிலும் ஊர்வலங்களிலும் மேடை நிகழ்வுகளிலும் காவடியாட்டம் வளர்ந்திருப்பது பாரம்பரிய கலைகளின் உயிரோட்டத்துக்கு வலுச் சேர்க்கின்றது என்றால் மிகையாகாது.
No comments:
Post a Comment