flashvortex.

Wednesday, January 11, 2012

அரசாங்க உத்தியோகத்தவர்களுக்கு கடன் அடிப்படையில் மரத்தளபாடங்கள்!

அரசாங்க உத்தியோகத்தவர்களுக்கு கடன் அடிப்படையில் அரசாங்க மரக்கூட்டுத் தாபனத்தினால் செய்யப்பட்ட மரத்தளபாடங்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இங்கு வேம்பு பாலை முதிரை கிறாண்டிஸ் தேக்கு போன்ற 100வகையான மரங்களினால் செய்யப்பட்ட மரத்தளபாடங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.

1லட்சம் பெறுமதியுள்ள வீட்டுக்குத் தேவையான மரத் தளபாடங்ளை 2பேரின் பிணையில் நியாயமான விலையில் பெற்றுக் கொள்ளலாம் என பிரதேச முகாமையாளர் சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.

மேலும் மக்கள் பாலை முதிரை தேக்கு போன்ற மரங்களையே விரும்புகின்றனர். நாங்கள் மக்களின் தேவைக்கேற்ப செய்து கொடுக்கப்படும் தளபாடங்கள் நல்ல மரங்களைக் கொண்டே செய்யப்பட்டுள்ளது. எனக் கூறினார்.

மேலதிகத் தகவல்களைப் பெற விரும்புகின்றவர்கள் 021-2220278 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment