flashvortex.

Tuesday, October 25, 2011

விமானங்கள்,மருத்துவமனைகளில் செல்லிடத் தொலைபேசி பாவிக்க அனுமதி இல்லாதது ஏன் ?

நாம் அதிகமான இடங்களில் மின்காந்த குறுக்கிடுகளை அவதானித்திருப்போம் அல்லவா?

உதாரணத்திற்கு நாம் கணனிக்கு முன்னால் இருந்து வேலை செய்யும்போது அலைபேசியில் அழைப்பு வந்தால் உடனே கணனி ஒலிபெருக்கியில் ஒரு குறுக்கீடு உண்டாவதை பார்த்திருப்போம்.......


இவை ஒரு பயங்கர பிரச்சனை என்று கூறுவதற்கு இல்லை.எனினும் இதே பிரச்சனை விமானத்தில் வந்தால் எவ்வாறு இருக்கும் தெரிமா?

பொதுவாக ரேடியோ அலைகள் மூலம் இயங்கும் அனைத்து சாதனங்களும் ரேடியோ என்றே அழைக்கப்படும்.........


நாம் அன்றாட வாழ்வில் பாட்டு கேட்க பாவிக்கும் ரேடியோக்களில் 2 வகை உண்டு.
 1 .fm redio - frequency modulated redio -  மீடிறன் மட்டிசைக்கப்பட்டது
  2. Am redio - Amplitude modulated redio- வீச்சம்  மட்டிசைக்கப்பட்டது


ஒரு விமானத்தில் வெவ்வேறு  காரணங்களுக்காக அதிகமான வானொலி ஒலிபரப்பு  சாதனங்கள் காணப்படும்....உதாரணமாக, விமானிகள் விமான கட்டுப்பாட்டு மையத்துடன் பேசிக்கொள்ள ஒரு வானொலி ஒலிபரப்பு சாதனம் உண்டு.
அதேபோல்  விமானங்கள் தங்கள் நிலையை ATC கணனிகளுக்கு (Air Traffic Control Computers ) தெரிவிக்க ஒரு வகையான வானொலி உண்டு..... காலநிலையை அறிய ரேடார் கருவிகள் உண்டு......இவை அனைத்து வானொலி சாதனங்களும் தமக்குடிய மீடிறன்களில் வேலை செய்யும்.( Specific Frequency)
இப்படி இருக்கையில் யாரவது தங்கள் தொலைபேசியை பாவிக்க முற்பட்டால் அது உயர் சத்தியை கடத்தும்.( up to 3 watts). இதன் போது வெளியேறும் அலைகளானது விமானத்தில் இருந்து அனுப்பப்படும் அலைகளின் மேல் பொருந்துகையடைய முற்படும்.
இதனால் விமானத்தில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் குழப்பம் அடையும்.  அப்போது விமானத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வடம் ( Wire) சிறிதாவது சேதமடைந்திருந்தால் அது கணனி ஒலிபெருக்கிகள் போல இந்த அலைகளை பெற்று விடும்......அதனால் தவறான செய்திகளே கட்டுப்பாட்டு மையத்தை அடைய வாய்ப்புக்கள் உண்டு..............

அதிகமான மருத்துவமனைகளில் வடமில்லா வலையமைப்புடன் (wireless network) கூடிய சாதனங்களே   தற்போது அதிகமான சாதனங்களின் அன்டெனாவானது Nursing station உடன் Wireless network மூலமே இணைக்கப்பட்டுள்ளது...............   

இந்த நிலைமையில் நாம் தொலைபேசியை பாவித்தோமானால் வரும் அலைகள் இந்த அலைகளுடன் மேற்பொருந்துகையடைய  முற்பட்டு தவறான செய்திகளே சென்றடையும்............   

தொலைபேசியை பாவித்தால் மட்டும் இப்படி நடக்க வாய்ப்புக்கள் உண்டு என எண்ணுவது தவறு.....
சாதாரணமாக செல்லிடத் தொலைபேசிகள் தங்கள் சேவை வழங்குனர்களுடன் ஒரு தொடர்பை   எந்நேரமும் வைத்துக் கொண்டே இருக்கும்.
இதன் காரணமாக வரும் அலைகளும்  இந்த பிரச்சனையை உண்டாக்க வாய்ப்புக்கள் உள்ளது.

எனவே மருத்துவமனைகளில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது நல்லது...........    


ஒழுங்காக காவலிடப்படாத லாப்டாப்புக்களும் CD பிளேயர்களும் இதே பிரச்சனையை விமானங்களில் ஏற்படுத்தும். அவற்றில் இருந்து சிறியளவான அலைகள் தெறிப்படைவதே இதற்கு காரணம்.

எனவே மருத்துவமனைகள், விமானங்கள்,எரிபொருள் நிலையங்கள் என ஆபத்தான இடங்களில் நாம் எமது செல்லிடத் தொலைபேசிகளை அணைத்து வைப்பது சிறந்தது.

1 comment:

  1. நல்ல தகவல் தொடர்ந்தும் எழுதுங்கள்.

    ReplyDelete