flashvortex.

Tuesday, October 25, 2011

சுழல்பந்தின் நாயகன் முத்தையா முரளிதரன்

பல சாதனைகளின் நாயகனாகத் திகழும் முத்தையா முரளிதரன் 1972.4.17ம் திகதி பிறந்தார். இவர் இலங்கையணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரும், மலையகத் தமிழரும் ஆவார்.
டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை புரிந்த முதல் வீரர் என்ற பெருகைக்குரியவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

    கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் பாடசாலைக் கல்வியை பயின்ற முரளிதரன் பாடசாலை துடுப்பாட்ட அணியில் விளையாடி அதற்கு தலைமைதாங்கி இருந்தார். பாடசாலைக் காலத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்த முரளி அதே நேரம் பாடசாலை துடுப்பாட்ட அணியின் பயிற்றுனர் சுனில் பெர்னான்டோவின் ஆலோசனையின் படி சுழல்பந்து வீச்சை தொடங்கினார்.
     1990 - 1991 ஆண்டுகளில் இலங்கையின் பாட்டா நிறுவனம் வழங்கும் பாட்டா ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்ற விருதினைப் பெற்றார். 1991ம் ஆண்டில் தமிழ் யூனியன் துடுப்பாட்ட கழகத்தில் இணைந்து தனது துடுப்பாட்ட  வாழ்வை ஆரம்பித்தார்.





     இலங்கை அணிக்காக 1992ம் ஆண்டு  முதல் டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டியில் அவுஸ்ரேலியாவுக்கு எதிராகவும் 1993ல் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இந்தியஅணிக்கு எதிராகவும் காலடிஎடுத்து வைத்தார்


.

     1992ம் ஆண்டில் இருந்து  இலங்கையணியில் விளையாடத் தொடங்கியதில் இருந்து இதுவரை 800 டெஸ்ட் இலக்குகளையும் 532 ஒருநாள் இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.

      கிரிக்கெட் உலகின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் பத்திரிகை 1999ம் ஆண்டில் உலகின் தலைசிறந்த வீரராக முரளிதரனை தெரிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

     2004ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமொன்றிலும் தன்னை ஈடுபடுத்திக்  கொண்டார்.இதே ஆண்டில் ஆழிப்பேரலையில் இருந்து 20நிமிடங்களில் உயிர் தப்பிய முரளிதரன் பின்னர் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

     டெஸ்ட் அரங்கிலும், ஒருநாள் போட்டியிலும்  அதிக விக்கெட் வீழ்தியவர்களில் வரிசையில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

     டெஸ்ட் தகுதி பெற்ற நாடுகள் அனைத்திற்கும் எதிராக ஒரு போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.இந்திய கிரிக்கெட் வாரியத்தால் 2008ம் ஆண்டு ஏப்ரல் மே ஜீன் மாதங்களில் 20ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக விளையாடினார்.இந்த அணி இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

     350 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 524ரண்களையும் 532 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்

     133 டெஸட் போட்டிகளில் விளையாடி 1அரைச்சதம் உள்பட 1156ரண்களை எடுத்து 800விக்கெட்டுகளை வீழ்தியுள்ளார்.



1992-2011.2.12 வரை


இதுவரை விளையாடியுள்ள உலககிண்ணகோப்பை - 40


       விளையாடிய இனிங்ஸ் - 11


       ஆட்டமிழக்காமை - 4

       ஓட்டம் - 62

       கூடிய ஒட்டம் - 16

       வீசிய பந்து - 1635

       கொடுத்த ஓட்டம் - 1044

       கைப் பற்றிய விக்கெட் - 68


இதுவரை விளையாடியுள்ள ஏகதேச தர போட்டி - 444

         விளையாடிய இனிங்ஸ் - 203

       ஆட்டமிழக்காமை - 75

       ஓட்டம் - 938

       கூடிய ஒட்டம் - 33

       வீசிய பந்து - 23308

       கொடுத்த ஓட்டம் - 14979

       கைப் பற்றிய விக்கெட் - 666


இதுவரை விளையாடியுள்ள சர்வதேச போட்டி - 350

         விளையாடிய இனிங்ஸ் - 160

       ஆட்டமிழக்காமை - 62

       ஓட்டம் - 667

       கூடிய ஒட்டம் - 33 (ஆட்டமிழக்காமல்)

       வீசிய பந்து - 18385

       கொடுத்த ஓட்டம் - 12035

       கைப் பற்றிய விக்கெட் - 532


இதுவரை முத்தையா முரளிதரன் இலங்கை, ஆசியலெவன், சர்வதேச கிரிக்கெட் வாரிய உலக லெவன், கண்டுரட்டஅணி, கெனட் இலாங்கஷயர், தமிழ்யூனியன் கிரிக்கெட் கழகம், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

      பல சாதனைகளை புரிந்த முத்தையா முரளிதரன் 22.7.2010 அன்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த முரளிதரன் 2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டியில் விளையாடிய பின்னர் ஓய்வு பெற்றார். இவர் இலங்கை அணிக்காக 18 ஆண்டுகள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

      முரளி ஓய்வு பெற்றமை இலங்கை அணிக்கு மட்டுமல்ல அவரின் ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். முரளியின் சாதனைகளை மிஞ்சுவதற்கு எவரும் வரப்போவதில்லை என்றால் மிகையாகாது.




No comments:

Post a Comment