flashvortex.

Tuesday, October 25, 2011

21ம் நூற்றாண்டில் தாதியத்தின் எழுச்சி



  ஆதிகாலத்தில் இருந்தே ஏதோ ஒருவகையில் தாதியம் இருந்துள்ளது.பண்டைய காலத்தில் ஆதிகால மக்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருந்தனர். சுகாதாரப் பிரச்சனை, குடிநீர்பிரச்சனை, நோய்களை எதிர்கொள்தல் போன்ற பல தரப்பட்ட பிரச்சனைகளால் அவதியுற்றனர்.எனவே தொற்றுநோய்களில் இருந்து விடுபடவும் சுகாதாரமான வாழ்கை முறையினை ஏற்படுத்திக் கொள்ளவும் முனைந்தனர். ஆகையால் தமது வாழ்வாதாரத்தில் வளர்ச்சி படிமுறைகளை நோக்கி பயணித்தனர். இப்பயணத்தின் பக்கபலமாகஇருந்ததே தாதியம். முற்காலத்தில் இது ஒரு தொழிலாக காணப்படவில்லை மாறாக இது ஒரு கலையாகவே காணப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தாதியத்தின் தேவை அதிகரித்தமையால் அது தொழில் ரீதியாக வளர்ச்சியடைந்து விஞ்ஞானரீதியில் பல படிமங்களாக வளர்ந்து வைத்தியத்துறையும் தாதித்துறையும் வளர்ச்சி கண்டது.


     தாதியத்தில் பொதுவாக பெண்களே அதிகளவில் ஈடுபடுகின்றனர். இதற்கு காரணம் பெண்களுக்கு மென்மைத்தன்மை இருக்கும்இ ஓர் நோயாளியை பெண்ணே கவனமாக பாராமரிப்பாள் என்று கருத்து நிலவுகின்றது. ஆயினும் தொழில் ரீதியாக தாதியம் வளர்ச்சியடைந்த காரணத்தினால் தற்காலத்தில் ஆண்களும் தாதியத்தில் ஈடுபடுவதை காணமுடிகின்றது. 
     ஆரம்ப காலத்தில் தாதியமும் வைத்தியமும் பல நாடுகளில் இருந்ததாக அந்த நாட்டை ஆண்டமன்னர்களின் முலம் அறிந்து கொள்கின்றோம். ஏனெனில் மன்னர்கள் வைத்தியத்துறைக்கு பல ஆதரவுகளை வழங்கி இருந்தமையை வரலாறுகளின் முலமாக அறிய முடிகின்றது. பண்டைய மருத்துவ முறைகளை பின்பற்றியே தற்கால மருத்துவமுறை வளர்ச்சியடைந்துள்ளது. சமயமுறைகளிலும் தாதியம் தொடர்பான கருத்துக்கள் பின்பற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காக கத்தோலிக்க  திருச்சபையிலே தாதியப் பணிக்கென்று துறவறசபைகள் உள்ளன. 'அன்னைதெரேசாசபை' 'திருச்சிலுவைக்கன்னியர்சபை' இச்சபைகள் யாவும் வைத்திய தாதியப் பணியினையே பல நாடுகளிலும் ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. முற்காலத்தில்  சிலுவை யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பில் பல சுகாதாரக் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தன. வைத்தியசாலைகள் வைத்தியர்கள் தாதிகள் போன்ற பணிகளில் பற்றாக்குறை ஏற்பட்ட காரணத்தினால் ஆண்களும் தாதியத்தில் ஈடுபட முனைந்தனர். இவ் ஆண்களின் கூட்டமைப்பு இராணுவ தாதியக் கட்டளை எனப்பட்டது. இவ் முயற்சியே தற்காலத்தில் ஆண்களும் தாதியத்தில் ஈடுபட உந்துதலாக அமைந்திருந்தது. 
       தாதியத் தொழிலானது ஆரம்பகாலத்தில் இருந்து புண்ணியமான கருதப்பட்டுவருகின்றது. தாதியத் துறவிகளுள் பிரபல்யமானவர்களாக சென்கில்டேகரட்இ சென்எலிசபத்இசென்கதரின் ஆகியோர் திகழ்ந்தனர். இவர்கள் நோயாளர்கள் கண்பார்வையற்றோர் முடமானோருக்கு சேவை செய்தனர். தாதியத்தின் உன்னதபணி புளோரன்ஸ் என்னும் பெண்ணுடனேயே ஆரம்பமாகியது.இதனால் இப் பெண்மணி புளோரன்ஸ் நைற்றிஸ் கேள் என அழைக்கப்பட்டார்.



        தாதியர்கள் வைத்தியர்களை விட உயர்ந்த இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் ஏனெனில் வைத்தியர்கள் நோய்களை அறிந்து அதற்கான சிகிச்சையை முறைகளை மட்டுமே கூறுவார். ஆனால் தாதியர் நோயாளியாக மாறி அந்த நோய் மாறும் மட்டும் அவர்களுக்காகவே செயற்படுவார்கள். 

        தாதியக்கல்வி இன்று டிப்ளோமா கற்கைநெறியாக அங்கீகரிக்கப்பட்டு பல வகையில் தாதியம் பிரிக்கப்பட்டு நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் பற்தாதியம்இ காசநோய் தாதியம்இ உளத்தாதியம்இசிறுவர்தாதியம் இ சிறுநீரகவியல்தாதியம் இநரம்பியல் சத்திரசிகிச்சை தாதியம்இமுறிவுநெறிவு தாதியம்இமருத்துவ மாதர்இகுடும்பநலதாதியம்இஅடிப்படைக்கு பின்னான தாதியம்இபயிற்சிக் கல்லூரி தாதியம் இதாதியத்திற்கான பல்கலைக்கழககல்வி இ தாதியத்தின் ஆண்கள்இதாதியத்தில் ஆயுதபடை இதுணைத்தாதியம் இஉதவித்தாதியம்இஅறுவைச் சிகிச்சை தாதியம்இ போன்ற வகையில் தாதியம் பல்கிப் பெருகி வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது.
         கடமை உணர்வு சாதாரணமாக குடிமகனுக்கு இருப்பதில்லை. தனது உறவுகளுக்கும் உதவிபுரிவதில்லை. ஆனால் தாதிகள் யார் என்றே தெரியாதவர்களுக்கும் உறவாக எண்ணி உதவி புரிகின்றனர். தாதிகள் பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தினால் தற்காலத்தில் அதிகளவான மாணவர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு தாதிகளாக நியமிக்கப்படுகின்றனர். தாதிகள் பணத்துக்காக மட்டுமின்றி சமூக சேவைகளிலும் செயற்படுகின்றனர். 
        பிள்ளைகள் கூட தமது பெற்றோர்களை நோயற்ற வேளைகளில் அருகில் இருந்து பராமரிப்பார்களா என்பது சந்தேகமான ஒரு விடயம். ஆனால் கடமையுணர்வுடன் அன்பையும் இணைத்து இரவு பகல் பாராது பராமரித்து அவர்களுக்கு துணையாக இருந்து நோய் தீரும்வரை தன் நலம் பாராது விழித்துக் காத்திருந்து துணையாக இருந்து துயர்துடைப்பவர் தாதியரே! அதிகரித்து வரும் நோய்களுக்கு கூட தங்களை இசைவுபடுத்தி மனத்துணிவுடன் சேவை புரிகின்றார்கள். நித்திரையை விடுத்து தமது அன்றாட கருமங்களை விடுத்து இரவு பகல் சேவை புரிகின்றனர்.
         தாதியர்கள் பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.அதிகரித்துவரும் குடித்தொகைஇவீதிவிபத்துக்கள்இ கட்டடவசதிகள் குறைவுஇநிதிப்பற்றாக்குறைஇவைத்தியர் பற்றாக்குறைஇ ஊழியர் பற்றாக்குறைஇஉபகரணங்கள் போதமைஇதாதியருக்குரிய விடுதிகள் போதாமை போன்ற காரணங்களினால் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. தாதியர்கள் எதிர்நோக்கும் சாவல்களுக்கு தீர்வுகாண முடியாது. ஆனால் தீர்வுகாண வேண்டியதற்கு தீர்வு கண்டால் நவீனயுகத்தில் தாதியரின் பணி சிறப்பாக அமையும். தாதியப் பணியிலே ஆண்களையும் பெண்களையும் அதிக எண்ணிக்கையிலே தெரிவு செய்வதின் மூலம் நோயாளிகளை பராமரித்தல் இலகுவாக இருக்கும். 
          கட்டட வசதிகளை ஏற்படுத்தி நோயாளர்களுக்கு தொற்றுநோய் உண்டாவதனை தடுக்க முடியும். வைத்தியர்களை அதிகம் நியமிப்பதன் மூலமும் நோயாளர்களை அடிக்கடி பரிசோதிக்க முடியும்;. வீதிகளில் அதிகளவான காவல்துறையை கடமைக்கு அமர்த்துதல் மூலமும் நவீன வகையான உபகரணங்களை வழங்குதல் மூலமும் மிக விரைவாக சிகிச்சை அளித்தல் போன்றவற்றினூடாக சவால்களை எதிர்கொள்ள முடியும்.
         தற்காலத்தில் தாதியத்தின் உன்னதசேவை அவசியமானதொன்றாகும். சவால்களை கடந்தும் உன்னத பணியில் தம்மை இணைக்கும் தாதியர் சேவையை தரமுயர்த்துதல் அவசியமானதொன்று. ஆயினும் தாதியரில் தம்மை இணைக்கும் பணிக்கு இன்று அதிகளவான இளைஞர் யுவதிகள் ஈடுபடுவதனை காணமுடிகின்றது. பல்கலைக்கழக பட்ட நெறிக்கு இட்டு செல்லும் முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியவையே.

No comments:

Post a Comment