ஈரைந்து மாதங்கள் எனை தாங்கி பூமியிலே
ஈன்றெடுத்த தெய்வம் நீ...
பாலுட்டி சீராட்டி உன் உதிரத்தையேதந்து காத்தாய் நீ
என் மழலை மொழி கேட்க
எத்தனை காலம் காத்திருந்திருப்பாய்
என்னை வளர்த்திட நீ பட்ட
துயரங்கள்தான் எத்தனை ஆயிரம்
தாயே
உந்தன் நினைவுகளால்
ஏங்கித் தவிக்கின்றேன்
எப்போது எனை தேடி
வருவாய்..........
எப்போது எனை தேடி
வருவாய்..........
No comments:
Post a Comment