flashvortex.

Wednesday, August 1, 2012

வீரமாகாளியில் வீரவாள்

 யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சங்கிலிய மன்னன் கடைசி மன்னன் ஆவான். வீரத்துக்கு பெயர் போன மன்னன் என்றால் மிகையாகாது. இம் மன்னனோடு தொடர்பு பட்ட கோயில்களில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலும் ஒன்று.; நல்லூருக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள இக் கோயிலானது 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

Sunday, June 3, 2012

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படம்


பாவம் குறுந்திரைப்படமானது இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை மனோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கின்றனர். 

Tuesday, May 29, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.


பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.

பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??




நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.

இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?





கொள்ளிக்குடம் எடுத்து சுடலையிலே சுற்றிவர, அதிலே துளையிட்டு மனிதனின் இறுதிச்சடங்கை முடிக்க பயன்பட்டு வரும் மட்பாண்டத்தை இன்று  யாருமே கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகத்தின் மாற்றத்தில் பழையவற்றை மறந்து புதியவற்றை நாடும் மக்களின் செயற்பாடுகளில் எமது பழைய பண்பாடுகள் மழுங்கடிக்;கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்ட மட்பாண்டங்களை இன்று மக்கள் தள்ளி வைத்துவிட்டு அலுமீனியத்தை நாடிச் செல்கின்றனர். மட்பாண்டத்தின் பாவனையும் உற்பத்தியும் குறைவடைற்து வருகின்ற நிலையில் அலுமீனியத்தின் பாவனையும் சில்வரின் பாவனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.

Saturday, May 19, 2012

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!


Paristamilஎப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.