flashvortex.

Sunday, April 22, 2012

காதலின் காயம் ஆறவில்லையென்றால் கொஞ்ச நாள் காலத்தின் கையில் உங்களை விட்டு விடுங்கள்



நாம் எத்தனையோ பெண்களை பார்க்கிறோம் பழகுகிறோம் ஆனாலும் நாம் பார்க்கும், பழகும் எல்லா பெண்களையும் நமக்கு பிடித்து விடுவதில்லை நமக்கு பிடித்தஒரு பெண்ணைதான் நாம் விரும்பி காதலியாக்கிக் கொள்வோம் அப்படிப்பட்ட அழகான ஒரு காதல் மலர்ந்து வருவது நமக்கு கிடைக்கும் ஒரு பாக்கியம் அந்த வேளைகளில் இனி அவளுடனேயே ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட வேண்டும், அவளையேநம் வாழ்க்கையின் துணையாக்கிக் கொள்ள வேண்டும் என்று நமது விருப்பங்கள் நம்மிடம் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும்

நமது மனதில் ஊடுருவி விட்ட அவளின் ஒவ்வொரு செயலும் நமக்கு பிடித்துவிடும்அவள் எதை செய்தாலும் அவளை குற்றம் கண்டுபிடிக்க முடியாது அந்த அளவிற்கு அவள் சொல்லும் சின்ன சின்ன பொய்களையும் தவறுகளையும் ரசித்து ரசித்து பழகிவிடுவோம் அப்படிப்பட்ட நாம் ஒரு நாள் அவளையே பிரிந்து விடுகிற கட்டாயம் ஏற்படும் போது அதனுடைய ஆழமான வலிகள் நம்மை எங்கேயோ தூரத்தில் கொண்டு சென்று விட்டு விடுகின்றது அங்கே எதுவும் நம்மை ஆறுதல்படுத்த முடிவதில்லை

பாகிஸ்தானில் மூத்த பத்திரிகையாளர் படுகொலை

பாகிஸ்தானிலிருந்து வெளி வரும் 'டாவ்ன்' பத்திரிகையின் ஆசிரியர்களில் ஒருவரான முர்தாஷா ரிஷ்வி கராச்சியின் தெற்கே உள்ள நகரமொன்றில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் கழுத்து அறுத்துக் கொல்லப் பட்டுள்ளார்.

வியாழன் அதிகாலை  இவர் கொலை செய்யப்பட்டு நகரின் பாதுகாப்பமைச்சின் கட்டடத்துக்கு அருகில் உள்ள மாடி வீட்டின் மேல் மாடியில் போடப் பட்டிருந்தமை கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஸ்பெக்ரம் முறைகேடு விவகாரம் : கனிமொழியிடம் மீண்டும் விசாரணைக்கு அழைப்பு?

கலைஞர் தொலைக்காட்சிக்கு டெலிகாம் நிறுவனத்திடமிருந்து ரூ.233 கோடி கடன்  எந்த அடிப்படையில் கையாறியது என நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்  விளக்கமளிக்க வருமாறு கனிமொழி எம்.பிக்கு அமலாக்க பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 26ம் திகதி டெல்லியில் உள்ள அமலாக்கபிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உரிய ஆவணங்களை அவர் கொடுக்க வேண்டுமென சம்மனில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் கனிமொழி தனது வங்கி கணக்குகள், கலைஞர் டி.வியின் வங்கி கணக்குகள் மற்றும் கடன் பண பரிமாற்றத்துக்கான வங்கி கணக்கு விபரங்களை அமலாக்க பிரிவிடம் தாக்கல் செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருவதால் தற்சமயம் கனிமொழி அதில் பங்கேற்று வருகிறார்.

இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கை விஜயம் கூறுவதென்ன?

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவினர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார்கள்.

இலங்கையில் போருக்குப் பின்னரான சூழ்நிலையில், அங்கு மக்கள் மறுவாழ்வுப் பணிகளும், நீடித்து நிலைக்கக்கூடிய அமைதிக்கான வழிமுறைகளும் எந்த மட்டத்தில் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்காகவே தங்களது இந்தப் பயணம் அமைந்திருந்ததாக சுஷ்மா ஸ்வராஜ் குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

Wednesday, April 18, 2012

நோர்வே படுகொலைகளை குற்றமாக கருத முடியாது : பிரெய்விக்

நோர்வேயில் கடந்த வருடம் 77 பேரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ஆண்டெர்ஸ் பிரேய்விக் 'தான் செய்தவை குற்றச்செயல்கள் அல்ல' என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கார்க்குண்டு தாக்குதல், மற்றும் உட்டோயா தீவில் தொழில்கட்சியின் இளைஞர் கூட்டத்தின் மத்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் என்பவற்றில் 77 பேர் பலியாகியிருந்தனர்.

இவ்விரு தாக்குதல்களையும் ஒற்றை மனிதராக மேற்கொண்டிருந்த பிரேய்விக் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நேற்று (திங்கட்கிழமை) அவர் நீதிமன்றில் இரண்டாவது தடவையாக ஆஜர்படுத்தப்பட்ட போது,

Sunday, April 15, 2012

டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை

மஹேந்திர சிங் டோனி அறிவார்ந்த டெஸ்ட் தலைவர் இல்லை என இந்திய அணியின் முன்னாள் தலைவர் மொஹமட் அசாரூதீன் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று வகையான போட்டிகளுக்கும் வெவ்வேறு தலைவர்கள் நியமிக்கப்பட வேண்டுமென அஸாரூதீன் கூறியுள்ளதாக இந்திய தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஒருநாள் மற்றும்  இருபதுக்கு-20  கிரிக்கெட் போட்டிகளில் மஹேந்திர சிங் தோனி சிறந்த தலைவராக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்

உங்கள் செல்ல குழந்தைகளுக்கு பருவம் தவறாமல் வழங்கி வந்த போலியோ சொட்டு இனி வழங்க வேண்டியது இருக்காது. காரணம் இந்தியாவில் 17 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்னர் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. போலியோ இல்லாத நாடாக உலக சுகாதர நிறுவனமும் இதனை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இன்று நடப்பதுதான் கடைசி கட்ட போலியோ ஒழிப்பு சொட்டு முகாம்.