flashvortex.

Wednesday, July 24, 2013

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 05

பெற்றவர்கள் இல்லை என்றால் சொந்தபந்தம் கூட இந்த காலத்தில் யாரையுமே பார்க்காது. தமது குடும்பத்தை பார்க்கவே  அவர்களுக்கு முடியாத போது சொந்தமாய் இருந்தாலும் மற்றவர்களின் குடும்ப சுமையை யார்தான் ஏற்க முன்வருவார்கள்.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 04

எந்தவொரு மனிதனும் வாழ்வில் சந்தோசமாகவும் எல்லோரும் மதிக்கத்தக்கவகையிலும் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றான். அதற்கு பணமும் வழிவகுக்கின்றது. வாழ்வில் எல்லோரும் தங்களை மதிக்க வேண்டும் என எண்ணும் மனிதர்கள் பொருளாதார ரீதியிலும் உயரவேண்டும் என்று நினைக்கின்றனர்.  இதனால் என்ன கஸ்ரப்பட்டாவது தாம் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தம்மிடம் இருக்கும் சொத்தினை வட்டிக்கு அடகு வைத்து தமது மகனை வெளிநாட்டிற்கு அனுப்புகின்றனர்.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 03

வெளிநாட்டு; கனவில் ஆரம்பித்த இவள் படகேறிச்செல்ல தனது கணவனை அனுப்புவதற்காய் கடலோடு விளையாடிய யாழ் குருநகர் பகுதியை சேர்ந்த மரியா தீர்மாணித்தாள். இதனால் பறிபோனது இவள் உயிர் மட்டுமே. எங்கும் இதே கதை தான் தனது ஒன்றரை வயத மகளை விட்டு எவ்வாறு இப்படி ஒரு முடிவினை தேடிக்கொண்டாள் மரியா?

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 02

'எப்படித்தான் இந்த பிஞ்சுக்குழந்தையை விட்டுட்டு போக இவளுக்கு மனசு வந்திச்சுதோ? அந்த கடவுள் தான் காப்பாத்தி இந்த பிள்ளையளுக்கு தாய குடுத்திருக்கு' என்று ஒரு வயது சின்ன
குழந்தையினை இடுப்பில் வைத்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் சோபா.

துயர் படிந்த கதைகள். அதிகரிக்கும் தற்கொலைச் சாவுகள்…….?????? கதை – 01

யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் உருண்டோடி விட்டன. சாவுகள் வேதனைகள் இனி தமிழ்ச் சமூகத்தை சூழாது இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற காலமிது. பின்னங் கால் பிடரியில் பட படுதுயரங்களோடு பாதுகாத்து வந்த உயிர்கள் பக்குவமாய் பாதுகாக்கப்பட வேண்டியவைகள்.

Tuesday, October 30, 2012

புத்துயிர் பெற்றுவரும் நெசவுக் கைத்தொழில்



ஆடைகள் உடுபிடவைகள் போன்றவற்றிற்கு இந்தியாவை நம்பிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை மக்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தாமே தமது ஆடைகளை நெய்து உடுத்த வரலாறுகள் உண்டு. அன்றைய காலத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் இந்த நெசவுக் கைத்தொழில் இருந்துள்ளன.

பள்ளி இல்லாத கிராமம் கல்விக்கு ஏங்கும் சிறுவர்கள்


தெல்லிப்பளை கொல்லங்கலட்டி 22 வருடங்களின் பின் தமது சொந்த மக்களை பார்த்து பூரித்து நின்றது. அப் பூரிப்பில் மக்களும்.

ஆனால் வளம் கொழிக்கும்  இப் பூமியில் இன்னும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மீள்குடியேறி உள்ளனர் மக்கள். இங்கு தான் 5வயது சிறுமியான குலக்சிகாவின் உள்ளிட்ட  பல சிறுவர்களின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படப்போகிறது.

Tuesday, October 23, 2012

அழிவடைந்த நிலையில் இரு நூற்றாண்டுகள் பழமை மிக்க தேவாலயம்


தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 196 ஆண்டுகள் பழமை வய்ந்த வரலாற்றுப் பெருமைமிக்க அமெரிகன் மிஷன் தேவாலயம் இன்று கவனிப்பாரற்றுக் கிடக்கிறது.

இன்னும்; நான்கே வருடங்களில் தனது 200 ஆவது வயதைத் தொடவுள்ளது இந்தப் பழம்பெரும் தேவாலயம்.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலப்பகுதியோடு இத்தேவாலயத்தின் வரலாறும் ஆரம்பிக்கின்றது.

மீள் குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வு மீளாதா??



நாட்டில் நடந்த யுத்தத்தின் பிறகு யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மீள்குடியேற்றம் நடைபெற்று வருகின்றநிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வாழ வேண்டிய சுழலுக்கு ஆளாகியுள்ளனர் அவ்வாறான ஒரு நிலையிலேயே தீவுப்பகுதி மக்களும் வாழ்ந்துகொண்டு வருகின்றனர்.

Sunday, October 14, 2012

வாழ்வும் சாவும்................




ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டேன். இறப்பதற்கும் தயாராகி விட்ட அந்த நொடி என்ன நினைத்து என்னை பிடித்திருந்த உடும்புக்பிடி நீங்கியதோ தெரியாது. மீண்டும் தப்பிவிடுவேன் என்ற எண்ணத்தோடு இரு கைகளினாலும் தண்ணீரை தள்ளினேன்.

Wednesday, August 1, 2012

வீரமாகாளியில் வீரவாள்

 யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் சங்கிலிய மன்னன் கடைசி மன்னன் ஆவான். வீரத்துக்கு பெயர் போன மன்னன் என்றால் மிகையாகாது. இம் மன்னனோடு தொடர்பு பட்ட கோயில்களில் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோயிலும் ஒன்று.; நல்லூருக்கு மேற்குத் திசையில் அமைந்துள்ள இக் கோயிலானது 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

Sunday, June 3, 2012

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படம்


பாவம் குறுந்திரைப்படமானது இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ் குறுந்திரைப்படமாகும். இத் திரைப்படத்தினை மனோ பிக்சர்ஸ் தயாரித்திருக்கின்றனர். 

Tuesday, May 29, 2012

ஏக்கங்களுடன் வாழும் தும்பளை கிழக்கு மக்கள்.


பிரச்சனைகள் எல்லோர்க்கும் வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருக்கும். இதற்கு மாறாக பிரச்சனைகயையே வாழ்க்கையாக கொண்டு வாழ்கின்றனர் தும்பளை கிழக்கு மக்கள்.

பருத்தித்துறையில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலிருந்து அமைந்திருக்கின்றது தும்பளை கிழக்கு கிராமம். இங்கு 389 குடும்பங்கள் வாழ்வாதார வசதிகள் இன்றி வசித்து வருகின்;றமை கவலைக்குரிய விடயமாகும். இக் கிராமம் அதிகமான பிரச்சனைகளை எதிர்நோக்கிய வண்ணம் உள்ளன. இக் கிராமமானது 2004ம் ஆண்டு சுனாமியின் போது பாதிக்கப்பட்டது. இது ஒரு கரையோர குடியிருப்பாகும்.

இல்லாத ஒன்றிற்கு எதற்காக தினம்??




நூறாயிரம் போர்வீரர்களின் துப்பாக்கி முனையில் செருகப்பட்டிருக்கும் கூர்மையான கத்தியைவிட செய்தித்தாள்களைக் கண்டு நான் பயப்படுகின்றேன்' என்றார் நெப்போலியன்.

இவர் கூறிய வார்த்தைகளுக்கு மாறாக இன்று ஊடகவியலாளர்களைப் பார்த்து பயப்படும் காலம் போய் ஊடகவியலாளர்கள் இந்த உலகத்தில் பயந்தே வாழவேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தல் ஒரு ஊடகவியலாளன் தனது கருத்துக்களை சுதந்திரமாக வைக்கமுடியாத சூழலே நிலவுகின்றது.அரசாங்கத்திற்க்கு எதிராக ஒரு கருத்தை முன்வைக்கும் போதே ஊடகவியலாளர்கள் மீது எல்லோர் மீதும் பார்வை திரும்புகின்றது.அடுத்த கணம் அந்த ஊடகவியலாளன் 'கடத்தப்பட்டார் அல்லது தாக்கப்பட்டார்' என்ற செய்தி வெளிவரும்.

இப்படியே குறைந்தால் இறுதிக்கிரியை என்னவாகும்?





கொள்ளிக்குடம் எடுத்து சுடலையிலே சுற்றிவர, அதிலே துளையிட்டு மனிதனின் இறுதிச்சடங்கை முடிக்க பயன்பட்டு வரும் மட்பாண்டத்தை இன்று  யாருமே கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டு விட்டது. நாகரிகத்தின் மாற்றத்தில் பழையவற்றை மறந்து புதியவற்றை நாடும் மக்களின் செயற்பாடுகளில் எமது பழைய பண்பாடுகள் மழுங்கடிக்;கப்பட்டு வருகின்றன. மக்களின் வாழ்க்கையோடு ஒன்றாக கலந்துவிட்ட மட்பாண்டங்களை இன்று மக்கள் தள்ளி வைத்துவிட்டு அலுமீனியத்தை நாடிச் செல்கின்றனர். மட்பாண்டத்தின் பாவனையும் உற்பத்தியும் குறைவடைற்து வருகின்ற நிலையில் அலுமீனியத்தின் பாவனையும் சில்வரின் பாவனையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

சிறுவர்களின் எண்ணங்களை வெளிக் கொண்டுவந்த 'எனது உலகு' கண்காட்சி



சிறுவர்களின் மனதிலே இருக்கும் எதிர்பார்ப்புக்களையோ எண்ணங்களையோ யாருமே எளிதில் புரிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாது. அவர்களுக்கும் தமது மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்துவதற்கும் சந்தர்ப்பமும் அமைவதில்லை.

Saturday, May 19, 2012

வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது!


Paristamilஎப்ப பார்த்தாலும் சண்டைதான், எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் வீட்டில் நிம்மதியே இல்லை என்று புலம்புபவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த கட்டுரை... தம்பதியரிடையே இணக்கம் ஏற்படவும், குடும்பத்தில் அமைதி நிலவவும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
 

காதல் திருமணம் செய்யுங்கள்! நிறைய நன்மையிருக்கு!!


Paristamilதிருமணம் என்பது ஒரு அழகான ஒன்று. அந்த திருமண வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றால் இரு மனங்களும் நன்கு புரிந்து கொண்டால் மட்டுமே முடியும். அந்த திருமணம் இரு வகைகளில் நடைபெறும். ஒன்று காதல் திருமணம், மற்றொன்று பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைப்பது.
 
பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணத்தில் இருக்கும் நன்மைகள் அனைவருக்கும் தெரியும். ஆனால் காதல் திருமணம் என்றால் சிலருக்குப் பிடிக்காது, அதற்குக் காரணம் அவர்களுக்கு அதன் அருமை, பெருமை தெரியாததே ஆகும். காதல் திருமணம் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள் கூறும் அனுபவத்தை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.

காதலின் சின்னங்களாக கல்லறைகள் வேண்டாம். வாழும் வீடுகளே இருக்கட்டும்.


Paristamilசமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கு புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்ற போது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தை பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும் போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது.

நம்மைப் பற்றி நமக்கு......


Paristamilநம்மில் பலருக்கு மற்றவர்களைப் பற்றித் தெரியும். நம்மைப் பற்றி தெரிந்ததை விட அதிகமாக அடுத்தவர்களைப் பற்றித் தெரியும். அதுவும் அடுத்தவரின் குறைகள் நம் கண்ணுக்கு நன்றாகவே புலப்படும். அதை நம் இயல்பாகவே நாம் கொண்டு விட்டோம். நிலைக் கண்ணாடியில் நம் பிம்பத்தைப் பார்த்து ரசிக்க மனம் ஆசைப்படுவதைப் போல, நம் அகத்தை நாமே உணர்ந்து ரசிக்க நாம் ஏதாவது செய்திருக்கிறோமா என்று சொன்னால், பெரும்பாலானோர், ஏதோ தெரியும் என்ற பதிலைத் தான் தர விழைவார்கள்.
 
நம்மைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்து கொள்ளும் பட்சத்தில், நம்மால் நம் நிறை, குறைகளை சமமாக உணர முடியும். நம் நிறைகளை நாமே வாழ்த்தவும், குறைகளை நாமே சீர்திருத்திக் கொள்ளவும் பேருதவியாகத் தான் தன்னை உணர்தல் தேவைப்படுகிறது.